உடுமலை, ஜன.10- மழைக்காலங்களில் வீணாகும் மழைநீரை சேகரிக்கும் வகையில் நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாய நிலங்கள் கொண்ட தாகவும், பெரும் பகுதி மக்களுக்கு விவசாய வேலைகள் தான் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதி விவசாய நிலங் களுக்கு அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து மண் டல வாரியாக பிரித்து தண்ணீர் தரப்படுகிறது. கடந்த வருடம் இடைப்பட்ட காலத்தில் பருவ மழை இல்லாததால் அணை கள் திறக்கப்படவில்லை. குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் தென்னை மரங்களை காப்பற்ற லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றினார்கள். வசதியில்லாத விவசாயி களின் தென்னை மரங்கள் காய்ந்து போனது. இந்நிலையில், இம்மாதம் பெய்த மழையால் இப்பகு தியில் இருக்கும் அனைத்து நீர் வழித்தடங்களிலும் தண்ணீர் சென்ற கொண்டுள்ளது. எனவே அனைத்து நீர் வழித்தடங் களிலும் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேகரிக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் கள்.