அரசு பள்ளியில் மேலாண்மைக் குழு
கோவை, ஆக. 24- அன்னூர் ஒன்றியத்தில் உள்ள ஆனையூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர் கள் தேர்வு நடைபெற்றது. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு சனியன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் அ.அனிட்டா தலைமை வகித்து பள்ளி மேலைண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர் தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், வருகை பதிவு, கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், உறுப்பினர் தேர்வுக்கான தகுதிகள், காலஅவகாசம் ஆகியவை தெளிவுப்படுத்தப் பட்டன. முடிவில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக அரு ணாதேவி, துணைத் தலைவராக மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், புதிய உறுப்பினர்கள் அனைவ ரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஏரியில் மண் அள்ள அனுமதி கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
ஈரோடு, ஆக.24- அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் மண் அள்ள அனுமதி கேட்டு விவசாயிகள் சாலை நடுவே டிராக் டரை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் மற் றும் களிமண் அள்ளிக்கொள்ள, விவசாயிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இவ்வகையில், அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில், அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த ஆக.19 தேதி மற்றும் 20 ஆம் தேதியன்று மண் அள்ளி சென்றனர். இந்த ஏரியில் நிர்ணயிக்கப்பட்ட 1,300 யூனிட் மண் அள்ளப்பட்டதை தொடர்ந்து, மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதியில்லை. அதே சமயம், அருகில் உள்ள எண்ண மங்கலம் ஏரியில், 14 ஆயிரம் யூனிட் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எண்ணமங்கலம் ஏரியிலும் மண் அள்ள அனுமதி பெற்றுள்ள, கெட்டிசமுத்திரம் ஏரி சுற்று வட்டார பகு தியை சேர்ந்த விவசாயிகள், எண்ணமங்கலம் ஏரிக்கு டிராக் டருடன் சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ளவர் கள் இங்கு மண் அள்ள வரக்கூடாது என எதிர்ப்பு தெரி வித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், எண்ணமங்கலம் ஏரியில் மண் அள்ள அனு மதி மறுத்ததால், கெட்டிசமுத்திரம் ஏரியை ஒட்டிய சுமை தாங்கி பகுதியில் பாலத்தின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த அந்தி யூர் வட்டாட்சியர் கவியரசு மற்றும் அந்தியூர் காவல் ஆய்வா ளர் தனபால்விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கெட்டிசமுத்திரம் ஏரியிலும் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, கெட்டிசமுத்திரம் ஏரியில் மண் அள்ள அனுமதி வழங்கும் வரை, எண்ணமங்கலம் ஏரியிலும் மண் அள்ள அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் மறியலை விட்டு கலைந்து சென்ற
மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியர் பணிநீக்கம் செய்திட சிபிஎம் கோரிக்கை
சேலம், ஆக 24- மாணவர்களை இழிவாகப் பேசிய பள்ளி தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு அளித்த னர். சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி யில் தலைமை ஆசிரியராக முருகவேல் என்ப வர் பணிபுரிகிறார். இவர் பள்ளி மாணவ மாணவிகளை மிக வும் கீழ்த்தரமாக தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்தான மாணவிகள் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சனை சம்பந்தமாக வட்டார கல்வி அதிகாரி நந்தகுமார் பள்ளியில் விசாரணையும் நடத்தி இருந்தார். ஆசிரியர் இதற்கு முன்பு தலைவாசல் பள்ளியில் பணியாற்றிய போது, அங்கு படித்த மாணவி ஒருவரை தாக்கியதில் கண் பறிபோனது குறிப்பிடத்தக்கது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டி ருந்தது. தற்போது புத்தூர் பள்ளிக்கு மாற்ற லாகி வந்தும் மாணவர்களிடம் இழிவாக பேசு வதை தொடர்கிறார். இப்பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமார் பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினார். விசா ரணை முடிந்த பின்பு ஆசிரியர் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட் டிருந்த நிலையில் மாணவிகளை இழிவா கப் பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் முருக வேலை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சிபிஎம் ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ . முருகேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் மனு அளித்தனர்.
காவல் வாகனங்களின் பராமரிப்புகள் நீலகிரி எஸ்பி நேரில் ஆய்வு
உதகை, ஆக.24- நீலகிரி மாவட்ட காவல் துறையில் உள்ள அணைத்து வகையான காவல் வாகனங்க ளின் பராமரிப்புகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி ஆய்வு மேற்கொண் டார். நீலகிரி மாவட்ட காவல் துறையில் உள்ள அனைத்து வகையான காவல் வாகனங்க ளின் பராமரிப்புகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா சனியன்று உதகை அரசு கலைக் கல்லுரி மைதானத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். காவல் துறையினர் பயன்படுத்தும் கார், ஜீப், வேன்கள், அதிரடிப்படை அவசர ஊர்தி கள், இருசக்கர வாகனங்கள் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மைதானத் தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு காவல் வாகனங்களின் ஆவ ணங்கள் மற்றும் பராமரிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட காவல் கண்கானிப்பா ளர் காவல் துறையினருக்கு வாகனங்கள் பரா மரிப்பு குறித்து அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, பேரிடர்காலங்களில் காவல் ரோந்து வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரி டமும் தனித் தனியாக குறைகளை கேட்டு டறிந்து அவர்களின் குறைகள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல், சௌந்தர ராஜன், ஆயுத படை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ் கர், சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்த ரசு மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஓய்வுதியர் சங்க பேரவை
கோவை, ஆக. 24- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்க கோவை மாவட்டம், ஆனைமலை வட்டக் கிளையின் 2 ஆவது பேரவை கூட்டம் ஆனைமலை முக்கோணம் பகுதியில் சனி யன்று நடைபெற்றது. வட்டகிளைத் தலைவர் ஆ.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற பேரவையில், இச்சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.மதன் துவக்கவுரையாற்றினார். வட்டகிளைச் செயலாளர் என்.பழனிச்சாமி, பொருளாளர் கே.விஜயகுமார் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை களை ஓய்வூதியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு காசு இல்லாமல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. முன்னதாக, ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன் வாடி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி உள் ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி பேசினர். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
முதலிபாளையம் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்
திருப்பூர், ஆக. 24 - முதலிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட் டமைப்பு கூட்டம் சனியன்று நடைபெற்றது. இதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவராக குருவம்மாள் அவர்களும் உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக தங்கவேல், தலைமை ஆசிரியர் பொறுப்பு செ.மலர்விழி, ஆசிரியர் பிரதிநிதி தங்கராஜ், பெற்றோர் உறுப்பினர்கள் எஸ்.புவனேஸ்வரி, எஸ்.பரிமளா, எஸ்.கஸ்தூரி, டி.விஜயஶ்ரீ, ஏ.ரெஞ்சு, என்.வீரக்குமார், எஸ்.பேபி, பி.ராமஜெயலட்சுமி, எஸ்.ஷஜ்னா, ஏ.வேலுச்சாமி, ஜி.நித்யா, பி.மோனிஷா, உள்ளாட்சி பிரதிநிதி மயூரி பிரியா, செந்தில்கு மார், கல்வியாளர் மகேஷ்வரன், சுய உதவிக் குழு உறுப்பினர் பி.ஜமுனா, முன்னாள் மாண வர் உறுப்பினர் கே.பிரபா, எஸ்.தங்கமணி, எம்.தனலட்சுமி, பி.கே. சிவபிரகாசம் ஆகி யோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட் டனர். பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர் கற் றல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருப் போம் என்றும் மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதிப்படுத்துவோம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.
ஜெய்வாபாய் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்வு
திருப்பூர், ஆக. 24 - திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனியன்று காலை பள்ளி மேலாண்மைக்குழு மறு கூட்டமைப்பு கூட்டமும், புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான தேர்தலும் பள்ளி கலை அரங்கத்தில் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை, ராயபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசி ரியை அங்குலட்சுமி ஆகியோர் தேர்தல் பார் வையாளராக இருந்தனர். ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒருங்கி ணைப்பாளராக ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, பள்ளி தலைமையாசிரியை புதிய தலை வராக வக்கீல் முத்துலட்சுமி, துணைத் தலைவராக மாற்றுத்திறனாளி பெற்றோர் பிர திநிதி அஜந்தா, ஆசிரியர் பிரதிநிதியாக அஞ் சுகவதி, 1 முதல் 5 ஆம் வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக ஜெயந்தி, பவித்ரா, முத்தமிழ் செல்வன், 6 முதல் 8 ஆம் வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக ராணி, கண்ணன் 9 முதல் 10 ஆம் வகுப்பு பெற்றோர் பிரதிநிதிகளாக சாய்தா பானு, ஷகிலா பானு, தேவா கிருஷ்ண மூர்த்தி, ஜெய மாயகிருஷ்ணன் பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு பெற்றோர் பிரதிநிதிக ளாக உமா மகேஸ்வரி, செண்பகராஜ், ராக வன், உள்ளாட்சி பிரதிநிதிகளாக துணை மேயர் எம்கே. பாலசுப்பிரமணியம், கவுன் சிலர் திவாகரன், இல்லம் தேடி கல்வியாளர் பிரதிநிதியாக தேன்மொழி, சுயஉதவி குழு உறுப்பினர் பிரதிநிதியாக விஷ்ணுபிரியா, முன்னாள் மாணவிகள் பிரதிநிதிகளாக ரதீஷா, பத்மபிரியா, ஆனந்த குமாரி, பெற் றோர் அல்லாத முன்னாள் மாணவ பிரதிநிதி யாக உதயதீபா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டு பதவி ஏற்றனர்.
பிஎஸ்என்எல் அலைபேசி கோபுரங்கள் 4ஜி தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த திட்டம்
கோவை, ஆக. 24- பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 6418 அலைபேசி கோபு ரங்களை 4ஜி தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துப்பட உள்ள தாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்திற்கு தற்போது வரை 1605 உபகரணங்கள் (e-NodeB) ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 913 உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன, அவற்றில் 235 அலைபேசி கோபு ரங்கள் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசாங் கத்தின் அந்த்யோதயா திட்டத்தின் கீழ், தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள 24.680 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை கள் வழங்க 247 அலைபேசி கோபுரங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. இதுவரை 79 அலைபேசி கோபுரங்கள் இயக்கப் பட்டு, 92 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. கோவைக்கு 8 அலைபேசி கோபுரங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 2 அலைபேசி கோபுரங்கள் செயலாக்கம் செய்யப்பட் டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 4.52 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் தங்களை பிஎஸ்என்எல் வாடிக்கையா ளர்களாக இணைத்து கொண்டனர். அதில், 2.08 லட்சம் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களில் இருந்து எம்என்பி மூலம் தங்களது இணைப்பை பிஎஸ்என்எல் க்கு மாற்றி உள்ள னர். மார்ச் 2020 இல், பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொ டர்பு வட்டத்தில் 44532 எப்டிடிஎச் இணைப்புகள் பயன்பாட் டில் இருந்தது. 4 ஆண்டுகளில், எப்டிடிஎச் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5.04 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில், இதுவரை 38000 எப்டிடிஎச் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 30296 அரசுப் பள்ளிகளுக்கு எப்டிடிஎச் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் தமிழக அரசிடமிருந்து பெற்றது. அதில், 21659 பள்ளி இணைப்புகள் தற்போது வரை வழங் கப்பட்டுள்ளன. கோவையில் 1271 எப்டிடிஎச் இணைப்புகள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கோவையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
கோவையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு கோவை, ஆக.24- கோவையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டதால் அப்பகு தியில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், கெம்பனூர் அருகே உள்ள அட்டுக்கல் பகுதியில் தோட்டத்து வீட்டில் சுரேஷ் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சனியன்று காலை வெளியே செல்ல சுரேஷ் வீட்டில் இருந்த கதவை திறந்தார். அப்பொழுது வெளியில் சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சிறுத்தை வனப் பகுதிக்குள் ஓடிச்சென்றது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத் துறையி னர் அப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு நடமா டிய கால் தடம் பதிவாகி இருந்தது. உடனடியாக அப்பகுதி யில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதி அருகே உள்ள வண்டிக்காரனூர் பகுதியில் ஆடுகளை அடையாளம் தெரியாத விலங்கு தாக்கியதாக வனத்துறையினர் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய நிலையில், அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை என வனத் துறையினர் தெரி வித்தனர். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த கிராமத்தி னர் வனப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகளை பதிவு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். பின்னர் தற்பொழுது அட்டுக் கல் சுரேஷ் என்பவர் வீட்டின் முன்பு சிறுத்தை இருந்ததை தொடர்ந்து மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள வளர்ப்பு விலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அதனை கூண்டு வைத்து வனத் துறையினர் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி வாகனங்கள் பறிமுதல்
கோபி, ஆக.24- கோபி அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவா ரியில் பயன்படுத்திய 14 வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே புஞ்சைதுறையம் பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கல்குவாரி யில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதுகு றித்து கிராம நிர்வாக அலுவலர் நடராஜ் அளித்த புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர்கள் மேலாளர் என மூவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கல்குவாரியில் வெடிவிபத்து ஏற்பட் டது குறித்து தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து பங்களாபுதூர் காவல் ஆய்வா ளர் தேவராஜ் கூறியதாவது, சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் பாறைகளை துளையிட பயன்படுத்திய 6 டிராக்டர்கள், 2 டிப்பர் லாரிகள் வெடிவிபத்தில் பலியா னவர்களை மறைக்க பயன்படுத்திய பொக்லைன் மற்றும் கல்குவாரியில் பயன்படுத்திய 4 கிடாச்சி வாகனங்கள் ஒரு பொக்லைன் வாகனம் என 14 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின்போது அங்கி ருந்த தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.