அன்னூர், ஜன.2- அன்னூர் அருகே புதுப்பாளையம் பகுதியில் காட்டுப் பன்றி தாக்கி ஆட்டுக்குட்டி உயிரிழந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள், வனத்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் அன்னூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் திங்களன்று மதியம் தனது ஆடுகளை புதுப் பாளையம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் மேய்ச்ச லுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த காட்டு பன்றிகள் கூட்டம் ஆடுகளை துரத்தி துரத்தி தாக்கியுள்ளது. இதில், ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் பரிதாப மாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி, இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விவரம் தெரிவிக்க, ஆவேசமடைந்த விவ சாயிகள், உயிரிழந்த ஆட்டுக்குட்டியை கோவை - சத்தி சாலையில் போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். காட்டுப் பன்றிகளை கட்டுபடுத்த தவறியதாக வனத்துறையை கண் டித்து முழக்கங்களை எழுப்பினர். காட்டுப்பன்றிகளினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை அதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். தகவலின் பேரில் சம் பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார் விவசாயிகளி டம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.