சூலூர், நவ. 21 - அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் தாலுகா அலுவல கத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசா யிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பா ளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம் பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்க ரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி விவசா யிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். கோவை வந்த முதல மைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந் தித்து மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிப்காட் அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங் களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. இதனால், இப்பகுதி விவசாயி கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே என்ற பெயரில் போராட்டக் குழு ஒன்றை தொடங் கினர். இவ்வமைப்பின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தி இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்க ளன்று அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள் அதிகம் உள்ள அன்னூர் சுற்றுவட்டாரத்தில் சிப்காட் அமைக் கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி னர். இதில், விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை வெளிப்ப டுத்தினர். விவசாயிகள் போராட்டம் காரண மாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் தாலுகா அலுவலக வளாகத்தில் குவிக்கப் பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக அன் னூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் பரப ரப்பான சூழல் நிலவியது.