districts

img

விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு

உடுமலை, மே 31- தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாட்டை மடத் துக்குளத்தில் நடத்த உள்ளதை தொடர்ந்து, செவ்வாயன்று அதற் கான வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட மாநாட்டு வர வேற்புக்குழு அமைப்பு கூட்டம் செவ்வாயன்று மடத்துக்குளம் விக் னேஸ்வரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி. வடிவேல் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், விவசாய சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா துணைத்தலைவர்  எம்.எம்.வீரப்பன் வரவேற்றார். விவசாய சங்கத்தின் தாலுகா தலைவர்  எம்.முத்துசாமி, தாலுகா செயலாளர்  எல்.கார்த்தி கேயன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்  எஸ். ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலா ளர் ஆர்.குமார் ஆகியோர் சிறப்பு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில், ஜூலை 24 ஆம் தேதியன்று மடத்துக்குளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத் துவது என்றும், மாநாட்டில் நிறை வேற்றபட்ட தீர்மானங்களை விளக்கி மாலையில் பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் சிறப்பான முறையில் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இம்மா நாட்டையொட்டி ஒன்றிய அரசின் விவசாய விரோத கொள்கையை எதிர்த்தும், தென்னை, நெல், மக் காச் சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கேட்டும், அமராவதி சர்க் கரை ஆலையை புனரமைத்து முழு மையாக செயல்படுத்த வேண்டும். விவசாயப் பகுதியில் கல்குவா ரிகள் செயல்படுவதை தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மடத்துக்குளம் பகுதியில் விவசாயி களை சந்தித்து விரிவான பிரச்சா ரம் செய்வது என்றும் முடிவு செய்யப் பட்டது. இந்த மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம், மாநில துணைத்தலை வர் டி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள னர்.

வரவேற்புக்குழு அமைப்பு

இதைத்தொடர்ந்து மாநாட்டை சிறப்பாக நடத்த வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதன்  தலைவ ராக எம்.எம்.வீரப்பன், செயலாள ராக ஆர்.வி.வடிவேல், பொருளாள ராக வி.ராஜரத்தினம், துணை தலைவர்களாக எம்.முத்துசாமி, ஆர்.ஆறுமுகம், வி.ஏ.ஈஸ்வரன், ஜி. கணேஷ், துணை செயலாளர்களாக எல்.கார்த்திகேயன், கே.ஈஸ்வரன், ஆர்.பன்னீர்செல்வம், எம்.கருணா நிதி, சிவராஜ் உட்பட 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட் டது. நிறைவாக விவசாய சங்க தாலுகா தலைவர் எம்.முத்துசாமி நன்றி கூறினார்.