ஈரோடு, ஜன.7- தேர்தல் வாக்குறுதிப்படி கரும்பு டன் ்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் சக்தி சர்க்கரை ஆலை 4 ஆவது மாநாடு கோபிசெட்டிபாளையத்தில் சங்கத்தின் தலைவர் டி.பி.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியினை துணைச் செயலாளர் விவேகானந்தன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத் தின் துணைத் தலைவர் முத்துசாமி முன் மொழிந்தார். துணைச் செயலாளர் ராமசாமி வரவேற்புரையாற்றினார். மாநாட்டை மாநில துணைத் தலைவர் நல்லாக்கவுண் டர் துவக்கி வைத்து உரையாற்றினார். தீர்மானங்கள் இம்மாநாட்டில் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு அறிவித்த விலை பாக்கி ரூ.89.71 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுக் கான லாபத்தில் பங்கு தொகையை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில், கரும்பு டன் னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சக்தி சர்க்கரை ஆலை நடத்தி வரும் வேளாண் கல்லூரியில் கரும்பு விவசாயிகளின் குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து மாநாட்டில் சங்கத் தின் சக்தி சர்க்கரை ஆலை தலைவராக டி.பி.கோபிநாத், செயலாளராக வி.பி.கார்த்தி கேயன், பொருளாளராக வெங்கிடுசாமி, துணை தலைவர்களாக முத்துசாமி, கே. ராமசாமி, சென்னியப்பன், துணைச் செயலா ளராக அவனாசியப்பன், விவேகானந்தன், ரங்கசாமி உள்ளிட்ட 23 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி நன்றி கூறினார்.