districts

img

சிப்காட் அமைக்கும் பணிக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது

தருமபுரி, டிச.3- தருமபுரியில் சிப்காட் அமைக்கும்  பணிக்கு விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிப்காட்டால் பாதிக்கப்படும் விவவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் தருமபுரி அருகே உள்ள ஜிவா  நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லை யன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இளம் பரிதி, ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ். சின்னராஜ், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.குப்புசாமி, பி.மாதேஸ், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் அன்பு, கே.எல்லப்பன், ஜெயராமன், இ.பி.பெருமாள், முனியப்பன், காளி, பி.பி. கந்தசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதில், தருமபுயில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அதகப் பாடி, தடங்கம், அதியமான் கோட்டை,  பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங் களில் 1183.05 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கர் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கர் நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கு மேலும் 1000 ஏக்கர் நிலம் எடுக்கப் படும் என முதல்வர் அறிவித்தார். இதன் அடிப்படையில் சிப்காட்  தொழில் துறை ஆணைய துணை தலைவர் நீரஜ்மிட்டல், நிலம் கையகப்படுத்து வதற்கான இடத்தை பார்வையிட்ட னர். இதில் தருமபுரி அருகே உள்ள ஜீவாநகர், ஜாகிர், அதியமான் கோட்டை பாலஜங்கமன அள்ளி  ஆகிய பகுதிகளில் உள்ள விவ சாய நிலங்களை கையகப்படுத் துவதற்கான முயற்சிகள் நடை பெற்றுவருகிறது.

சிப்காட் அமைக்க தேர்வு செய்யும் இடத்தில் வீடுகள், கிணறு, தென்னை, வாழை, நெல்,  கேழ்வரகு, மஞ்சள் உள்ளிட்ட பணப் பயிர்கள் விளையும்  நிலமாக உள்ளது. இந்த நிலத்தை சிப்காட் அமைப்ப தற்காக எடுத்துக் கொண்டால் இந்த நான்கு கிராம மக்களின் வாழ்வு  அழிக்கப்படும். எனவே, விளைநிலங் களை கையகப்படுத்தக் கூடாது என  வலியுறுத்தி டிசம்பர் 14 ஆம் தேதி யன்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் பாதிக்கப்படும் விவ சாயிகளுடன் தருமபுரி மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனுகொடுக்கும் போராட்டம் நடத்துவது என கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.