districts

img

வனவிலங்குகளால் பயிர் சேதம்: விவசாயிகள் ஆவேசம்

தருமபுரி, ஜூன் 30- வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதாகவும், வனத்துறை உரிய தலையீடு செய்து, பாதிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பொம்மிடி ரயில்  நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வனவிலங்குகளால் ஏற்படும்  பயிர் சேததிற்கு,  உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வனவிலங்குகள் வனத்திலிருந்து விவசாய நிலத்துக்கு வருவதை மின்வேலி அல்லது  கம்பி வேலி மற்றும் அகழி அமைத்து தடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, விவசாய வேலைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்மிடி காய்கறி விற்பனை  நிலைய கட்டண முறைகேடுகளை, பேரூ ராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டன. முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் எஸ்.தீர்த்தகிரி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் சோ.அர்சுணன், மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி, மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லையன், மலைவாழ் மக்கள் சங்க  மாநிலத் துணைத் தலைவர் கண்ணகி, மாவட்ட தலைவர் அம்பு ரோஸ், வட்ட பொருளாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலா ளர் திவ.தனுஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.