கோவை, அக்.4- விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை புரிய காரணமான ஒன்றிய அமைச்சரை கைது செய்ய வலியு றுத்தியும், அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும், அனைத்து தொழிற் சங்கத்தினர் கோவையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் விவசாய விரோத சட்டத்தை கண்டித்து, தலைநகர் தில்லியில் விவசாயி கள் ஆவேசமான போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்தொடர்ச்சி யாக உபி மாநிலம் லக்கிம்பூரில், இச்சட்டத்திற்கு எதிராக பேரணி சென்ற விவசாயிகள் மீது, ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி நான்கு விவசாயிகள், ஒரு ஊடக வியலாளர் பலியாகினர். இக்கொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சரை அஜய் மிஸ் ராவை கைது செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவ சாயிகள் முன்னணியினர் திரளா னோர் பங்கேற்றனர். முன்னதாக போராட்டத்தில் பங் கேற்றவர்கள் கருப்புக்கொடி ஏந்தி யும், கருப்பு பட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநில இணைச்செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் கே.மனோகரன், பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, எல்பிஎப் ப.மணி, ஐஎன்டியுசி பி. சண்முகம், ஏஐடியுசி எம்.ஆறு முகம், சி.தங்கவேல், விவசாயி கள் சங்கம் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, எச்எம்எஸ் டி.எஸ். ராஜாமணி, எம்எல்எப் தியாக ராஜன், ஏஐசிசிடியு ஆர்.பாலசுப்ர மணியன், எஸ்டிடியு ஷாஜகான், எல்டியுசி ஜி.மணிகண்டன் ஆகி யோர் பங்கேற்றனர். இதில் ஏராள மானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.