districts

img

கால்நடை பராமரிப்புத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு:

திருப்பூர், ஏப்.30- திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்களில் 73 பேர் நிரப்பப்பட்ட தில் கால்நடை பராமரிப்புத் துறை  இணை இயக்குநரின் உறவினர்கள் மற்றும் பல லட்சம் பணம் கொடுத்த வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த பணி நியமன ஆணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கூட்டம் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத் தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  எஸ்.ஆர்.மதுசூதனன் பேசு கையில் கூறியதாவது,  கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி முடிய கால்நடை பராமரிப்புத் துறை உதவி யாளர் பணிக்கு 4 ஆயிரம் பேருக்கு மேல் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால், எவ்வித தகுதி குறித்தும் பரிசீலனை செய்யாமல் மறுநாளே 73 பேருக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் நேரடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அது வும் அன்றைய தினமே பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட் டுள்ளது. மண்டல இணை இயக்குந ரின் உறவினர்கள் 15 பேருக்கு மேல் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2017 இல் விண்ணப்பித்தவர்களுக்குத் தான் நேர் காணல் நடைபெற்றது. நேர்காணலில் பங்கேற்காதவர்க ளுக்கும் பணி ஆணை வழங்கப்பட் டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை யில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்களின் உறவினர்களுக்குத் தான் பெரும் பகுதியான பணி ஆணை வழங்கியுள்ளனர். குறிப்பாக இணை இயக்குநரின் மனைவி கால்நடை மருத்துவராக பணி புரிகிறார். அவரது அக்கா மகளுக்கு திருப்பூரிலும், நெருங்கிய உறவினர்களுக்கு செல் லப்பம்பாளையம், ஜல்லிபட்டி, வாள வாடியிலும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். இவ்வாறு முறை கேடாக பணி நியமன ஆணை வழங் கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட நேர்காணல், பணி நியமன ஆணை வழங்கியதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். திருப்பூர்  மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பாரிவேந்தன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.மதுசூத னன் வலியுறுத்தினார். ஆனால், மாவட்ட ஆட்சியர், கால் நடை பராமரிப்புத் துறை இணை இயக் குநரையே இதற்கு பதிலளிக்க கூறி னார். அவர் பதிலளிக்கும்போது எஸ். ஆர்.மதுசூதனன் தலையிட்டு கேள்வி எழுப்பினார். அப்போது, எனது உறவி னர்கள் தகுதி அடிப்படையில் இதில் இடம் பெற்றுள்ளனர் என்று அவர் ஒப்பு தல் அளித்தார். எனவே இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கூறினார்.