ஈரோடு, ஜுலை 24- கெட்டி சமுத்திரம் நிலக்குடியேற்ற கூட்டு றவு சங்கங்களை கலைத்துவிட்டு, அந்த நிலத்தில் உள்ள சாகுபடியாளர் குடும்பங்க ளுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அந்தி யூர் தாலுகா 7 ஆவது மாநாடு அந்தியூரில் தாலுகா தலைவர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை எஸ்.ஆர்.வெங்கடாசலம் ஏற்றி வைத்தார். மாநாட்டை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். வி.மாரிமுத்து துவக்கிவைத்து உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி சிறப்புரையாற்றினார். இதில், அத்தாணி, அந்தியூர், கெட்டி சமுத்திரம் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கங் களை கலைத்துவிட்டு, சாகுபடியாளர்கள் குடும்பங்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும். அந்தியூர், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எலக்ட் ரானிக் எடை இயந்திரம் பயன்படுத்த வேண் டும். விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற விலங் குகள், விளை நிலத்திற்குள் புகுவதை தடுக்க அகலி வெட்டவும், மின்வேலி அமைக்கவும் வேண்டும். அந்தியூரில் உழவர் சந்தை ஏற்ப டுத்தித் தர வேண்டும். மேட்டூர் அணையிலி ருந்து உபரியாக வெளியேறும் நீரை அந்தி யூர் வட்டாரத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை களுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் தலைவராக பி.ஆனந்தராசு, செயலாளராக எஸ்.வி.மாரிமுத்து, பொருளா ளராக ஆர்.கணேசன், துணைத் தலைவராக எஸ்.ஆர்.வெங்கடாசலம், துணை செயலா ளராக வி.கே.ஆறுமுகம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.