districts

தாராபுரத்தில் போலி மருத்துவர் கைது

தாராபுரம், ஏப்.3- தாராபுரம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கொளத்துப் பாளையம் ராஜவீதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவபாலனுக்கு புகார்கள் வந்துள் ளது. இந்த புகாரை தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்து வமனை தலைமை மருத்துவர் சனியன்று கொளத்துப் பாளையம் சென்று மருத்துவம் பார்த்த அந்த நபரின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வீட்டில் மருந்து, மாத்திரைகள் இருந்துள்ளன.  மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த முதி யவரை விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜெயராஜ் (77), என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் உள்ளதா என்று  ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவரிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, டாக்டர் சிவபாலன் தாராபுரம் காவல்துறையினருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் ஜெயராஜை கைது செய்தனர். இவரிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணையில் ஜெயராஜ் குளத்துப் பாளையத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.