districts

img

உலகில் அமைதியை ஏற்படுத்த மனிதர்கள் மீதான நம்பிக்கை அவசியம்

திருப்பூர், ஜூன் 23 – உலகில் அமைதியை ஏற்படுத்த மனிதர்கள் மீதான நம்பிக்கை அவ சியம் என்பதை ஜூலியஸ் பூசிக்கின்  தூக்குமேடை குறிப்பு நூல் உணர்த்து வதாக முற்போக்கு வாசகர் வட்ட அமர்வில் கூறப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் வெள்ளியன்று முற் போக்கு வாசகர் வட்டத்தின் 70ஆவது  அமர்வு சிஐடியு பனியன் சங்கப் பொருளாளர் கே.நாகராஜ் தலை மையில் நடைபெற்றது.  பாசிசம் தலைவிரித்து ஆடிய ஹிட்லர் காலத்தில் சிறை வைக்கப் பட்ட ஜூலியஸ் பூசிக், சிறைக்குள் இருந்தபடி ரகசியமாக பதிவு செய்த  குறிப்புகள், பிற்காலத்தில் தூக்கு மேடை குறிப்பு என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டு உலக ளவில் பிரபலம் அடைந்தது. இந்த புகழ்வாய்ந்த நூலை முன்வைத்து அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த  கே.முகிலன் அறிமுக உரை ஆற்றி னார். அப்போது அவர் கூறுகையில்,  ஜூலியஸ் பூசிக் சிறையில் இருந்த போது எழுதிய இந்த புத்தகத்தில் அங் கிருந்த மக்களைப் பற்றியே எழுதியி ருக்கிறார். சமூகத்தில் பாசிசம் தலை விரித்தாடியபோது மக்கள் வாழ்வு பற்றி பதிவு செய்திருக்கிறார். புரட்சி யாளர் சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்பு நூலும் மக்களை பற்றிய பதிவுதான். வர லாற்றில் மக்களைப் படிக்க வேண் டும். மக்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். ஜூலியஸ் பூசிக் இக்குறிப்பை பதிவு செய்ததற்கான நோக்கமாக கூறும் அடிப்படையான விசயம், மனிதர்கள் மீதான நம்பிகை கொள்ள வேண்டும் என்ப துதான். மனிதர்கள் தனிப்பட்ட நல்ல வர்களா, கெட்டவர்களா என்பது முக் கியமல்ல. எல்லாவற்றையும் கடந்து  மனிதர்கள் மீது நம்பிக்கை வைப்பது  அவசியம். ஏனென்றால் மனிதர்கள் மீதான நம்பிக்கைதான் உலகில் அமைதியைக் கொண்டு வரும் என்று  அவர் கூறியிருப்பதாக முகிலன் குறிப்பிட்டார். இந்த அமர்வில் முற்போக்கு வாச கர் வட்ட அமைப்பாளர் பா.சௌந்தர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்ற னர்.