districts

img

சாதி ஆதிக்க சக்திகளால் வீடு இடிப்பு மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சந்திப்பு

திருப்பூர் ஆக.13 - திருப்பூர் மாவட்டம், காங் கேயம் அருகே நெய்க்காரம் பாளையத்தில் சாதி ஆதிக்க சக்தி களால் குத்தகை விவசாயி-யின் வீடு  இடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட தலை வர்கள் இடிக்கப்பட்ட வீட்டை  நேரில் பார்வையிட்டு பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. திருவேங்கடசாமி ஆகியோர் ஞாயி றன்று காலை நெய்க்காரம் பாளையம் சென்று இடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப் பட்டவர்களிடம் விவரம் கேட்ட றிந்து ஆறுதல் தெரிவித்தனர்.