districts

ஒகேனக்கல் அருவியில் குளிக்க கூடுதல் பாதுகாப்பு

தருமபுரி, ஜூலை 30- ஒகேனக்கல் அருவிகளில் குளிப்ப தற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை நாளில் வந்திருந்த சுற்றுலா பயணிகள், கூடுதல் பாதுகாப்பு வசதி ஏற் படுத்தி, குளிக்க அனுமதிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்தனர். கர்நாடகா மற்றும் கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்  வரத்தொடங்கியுள்ளதால், அண்மை யில் காவிரியாற்றில் விநாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்தது. இதன் காரணமாக ஒகே னக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதி கரித்தது. நீர்வரத்து அதிகரிப்பின் கார ணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, கடந்த வெள்ளியன்று முதல் ஒகே னக்கல் அருவிகளில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தடை விதித்திருந்தார். இதனால்  பிரதான அருவி செல்லும் நடைபாதை  பூட்டப்பட்டு ஒகேனக்கல் போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், கர்நாடகா அணைக ளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகே னக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வரு கிறது. இதன்படி சனியன்று 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயி றன்று டி 17 ஆயிரம் கன அடியாக குறைந் தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வரும் போதிலும், அருவிக ளில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், வார  விடுமுறையான ஞாயிறன்று ஒகேனக் கல் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பிர தான அருவி செல்லும் நடைபாதை யில் குவிந்தனர். ஒரு சில சுற்றுலா  பயணிகள் தடையை மீறி அருவியில் குளிக்க முயற்சி செய்தபோது காவலர் கள் தடுத்து, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவுறுத்தி னர். மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற் றில் பரிசல்கள் இயக்க 6 ஆவது நாளா கவும், அருவிகளில் குளிக்க 3 ஆவது  நாளாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள்  கூறுகையில், வார விடுமுறையை கொண் டாடுவதற்காக குடும்பத்தினருடன் ஒகே னக்கல் வந்துள்ளோம். கடந்த சில நாட் களாக நீர்வரத்து அதிகரித்ததால் காவிரி யாற்றில் பரிசல் இயக்குவதற்கும், அரு வியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவிக்கின் றனர். நீர்வரத்து குறைவினால் நடை பாதையின் கீழ் தண்ணீர் செல்வதாலும், அருவிகளிலும் குறைந்த அளவு தண் ணீர் கொட்டுவதாலும் சுற்றுலா பயணி களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்பட வாய்ப் புகள் இல்லை. ஞாயிற்றுக்கிழமை என் பதால் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அருவிப்பகுதிகளில் கூடுதலாக காவ லர்களை நியமித்து, அருவியில் குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.