மேட்டுப்பாளையம், ஜன.24- காத்தையாற்றை கடக்க கூடுதல் படகு இயக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கிடையே ஓடும் காந்தையாற் றின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டிற் காக கடந்த 2005 ஆம் ஆண்டு உயர்மட்ட பால மொன்று கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கத்தை சரிவர கணக் கிடாமல் இந்த காந்தையாற்று பாலம் கட்டப் பட்டதால் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் போதே பாலம் நீருக்கடியில் மூழ்கி விடும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நூறு அடியை எட்டிய நிலையில், இந்த உயர்மட்ட பாலம் வழக்கம் போல நீருக்குள் மூழ்கியது. இதனால் காந்தையாற்றின் மறுகரையில் உள்ள பழங்குடியின மக்கள் அதிகம் வசிக் கும் காந்தவயல், உளியூர், காந்தையூர், மொக்கைமேடு கிராம மக்கள் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு நகர பகுதிக்கு சென்றுவர பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். வேறு வழியின்றி காட்டாற்றை கடக்க பரிசலை பயன்படுத்தினர். இது மிக ஆபத்தான பயணம் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார் பொருத் திய ஒரு படகு இயக்கப்பட்டது. ஆனால், தினசரி பணி நிமிர்த்தமாக செல்வோர், மருத் துவம், கல்வி, விவசாய விளை பொருட் கள் விற்பனை என அனைத்து தேவைகளுக் கும் நான்கு கிராம மக்கள் சென்று வர ஒரு படகு போதவில்லை, குறைந்தபட்சம் மேலும் ஒரு படகையாவது இயக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.