கோவை, ஜூன் 2- கோவையில் வியாபாரியிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பீளமேடு அருகே உள்ள தண்ணீர்பந் தல், பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (39). இவர் காந்தி மாநகர், முல்லை நகரில் தள்ளுவண்டியில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாலசுப்பிரமணியத்திடம் ரூ.300 பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். அதிர்ச்சியில் அவர் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலி பரை பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கத்தி முனையில் பணம் பறித்தது கோவை யில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் இக்பால் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்ற சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று வருவதால், அப்பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.