districts

img

வால்பாறை - சாலக்குடி இடையே போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு

கோவை, நவ.25- கன மழையின் காரணமாக சாலைகள் மோசமான நிலை யில் இருபபதால், வால்பாறை – சாலக்குடி இடையே போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்ட சாலக்குடி அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. அங்கு பல்வேறு மாநிலம் மற்றும்  வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணி கள் மழுக்கப்பாறை எஸ்டேட் வழியாக 80 கிலோமீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வரு கின்றனர். வனப்பகுதி வழியாக செல்லும் போது வன விலங்குகளை பார்ப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதால், அந்த சாலையில் பயணிக்க அதிகளவில் விரும்புவார்கள். மழுக்கப்பாறை பகுதி தேயி லைத் தோட்ட தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான பழங் குடி மக்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது உட்பட பல்வேறு வேலைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.  இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு மழுக் குப்பாறை - அதிரப்பள்ளி சாலை இடையே ஆம்பளபாறை என்ற இடத்தில் கனமழை பெய்து, மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. உடனடியாக சாலை தற்காலிக மாக சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலை யில், சாலையை முழுமையாக சீரமைக்க முடிவு செய்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வழியாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. பணி முற் றிலும் நிறைவடையும் வரை வால்பாறை - சாலக்குடி இடையே போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.