ஈரோடு, ஜன.9- நகர்ப்புற வேலை வாய்ப்பு திட் டத்தை அனைத்து பேரூராட்சிகளுக் கும் விரிவுபடுத்த வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்தி விவசாய தொழி லாளர் சங்கத்தினர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விவசாயக்கூலி தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமலாகியுள்ள இடங்களில் தொடர்ந்து வேலை வழங்குவதோடு, அனைத்து பேரூ ராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண் டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிக ரித்து, தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். கிராமப்புற தூய்மை பணி யாளர்களை நிரந்தரப்படுத்தி சட்டப் படியான ஊதியம் வழங்க வேண்டும். கொளாநல்லி ஊராட்சியில் வேலை மறுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு பணியா ளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊர் பெயரில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும். மேட் டூர் உபரிநீரை அந்தியூர் வட்டார ஏரிக ளில் நிரப்ப வேண்டும். அரக்கன் கோட்டை கிராமத்திற்குட்பட்ட 15 குடும் பத்தினர் 15 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை அடங்கிய மனுவை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அளித்தனர். இதில், சங்கத்தின் மாவட்ட தலை வர் ஆர்.விஜயராகவன், கே.சண்முக வள்ளி, மாவட்ட பொருளாளர் எஸ். சண்முகம், துணைத்தலைவர் கே.பி. கனகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.