நாமக்கல், ஆக. 8- ஓணம் பண்டிகை நெருங்கியுள் ளதால், பள்ளிபாளையத்திலிருந்து கேரள சேலைகள் ஏற்றுமதி செய்யும் பணிகள் நிறைவுற்றுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை கேரளாவில் மிகவும் போற்றப்படும் மற்றும் கொண் டாடப்படும் பண்டிகையாகும். பத்து நாட்கள் நீடிக்கும் இத்திருவிழா கேரள மக்களிடையே சிறந்த பண்டிகை உணர்வைக் கொண்டு வருகிறது, மற்றும் மிகவும் சிறப்பாகக் கொண் டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை விசேச நாட் கள் இம்மாதம் ஆகஸ்ட் இறுதியில் துவங்க உள்ளதால், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள கேரளா வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறிக்கூடங்களில் ஏற்றுமதி செய்யும் பணிகள் தீவிர மடைந்துள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலையில் கேரள சேலைகளை உற்பத்தி செய்து வரும் விசைத்தறி சிறு உற்பத்தியாளர்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே, கேரள சேலைகள் அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. ஓணம் பண்டிகைக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள தால், நாங்கள் விசைத்தறியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நெய்த கேரள சேலைகளை எங்களுக்கு ஆர்டர் வழங்கிய மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்து விட்டோம். அவர்கள் கேரள சேலைகளை அடுத்த கட்டத் திற்கு மேம்படுத்துவதற்காகவும், அழகிய கண் கவர் வண்ணங்களை பதித்து கேரளாவில் இயங்கும் பெரிய, சிறு, குறு என பலதரப்பட்ட ஜவுளிக் கடை நிறுவனங்களுக்கு அனுப்புவ தற்கான பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். தற்பொழுது அடுத்த ஆறு மாதங் களுக்கு சராசரியான அளவில் வேலை வாய்ப்பும், ஆறு மாதங்களுக்குப் பிறகு ஓணம் பண்டிகை நெருங்கும் பொழுது மீண்டும் சேலை உற்பத்தி தீவிரமடையும், என்றனர்.