உடுமலை, மார்ச் 28 - காலாவதியான பொருட்களை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், சாலை ஓராங்களிலும் மொத்தமாக வீசிச் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள் ளது. உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மொத்த வியாபாரிகள், விற்பனை செய்யாத மற்றும் காலாவதியான பொருட்களை சாலை ஓரங்களில் குப்பைகளுடன் சேர்ந்து வீசி செல்கிறார்கள். சிலர் இந்த பொருட்களின் மீது தீ வைத்து செல்வதால் இதிலிருந்து வரும் புகையால் உடல் உபாதை கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற காலாவதியான பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் வீதிகளில் வீசி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.