தருமபுரி, மே 28- காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, ஒகேனக்கல் முதல் தருமபுரி வரை ஆயிரம் பேர் பங்கேற்கும் நடைபயணம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ. குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப் பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒகேனக்கல்லில் ஆயத்த மாநாட்டு நடைபெற் றது. இம்மாநாட்டில் மேற்கண்ட கோரிக் கையை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட மக்கள் இயக்கமான, ஒகேனக்கல் முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஆயிரம் பேர் பங்கேற்கும் நடைபயணம் ஆகஸ்ட் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாவட்ட நீரா தார மேம்பாட்டு கோரிக்கையான காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி நடைபெறும் இந்த இயக்கத்தில், அனைத்துப்பகுதி மக்க ளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி யின் தருமபுரி மாவட்டக்குழு கேட்டுக்கொள் கிறது. மேலும், காவிரியாற்றின் குறுக்கே மேக தாதுவில் அணை கட்டும் முயற்சியை கர் நாடக மாநில அரசு கைவிட வேண்டும். தரும புரி அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மூன்று அரசு மருத்துவக்கல்லூரிகளில் கண் காணிப்பு கேமரா செயல்படாது, மருத்துவர் களின் வருகையை கைரேகை மூலம் பதிவு செய்யும் கருவி பழுதடைந்துள்ளது போன்ற சிறு குறைபாடுகள் உள்ளது. இந்த கட்ட மைப்பு குறைபாடுகளை கருதி, நடப்பாண் டில் இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க் கைக்கு அனுமதிக்காதது கண்டனத்துக்குரி யது. எனவே சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.