பால் விலையை குறைத்திடுக
ஆவின் நிறுவனம் பச்சை, நீலம், ஆரஞ்சு போன்ற நிறப் பாக்கெட் களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந் நிலையில், கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பிரீமியம் பாக்கெட் பாலின் விலை லிட்ட ருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை தற்போது 60 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்க முடியாத நிலை ஏற் படும். தனியார் பால் அதிகவிலைக்கு விற்கும் நிலையில், அரசு நிறுவ னமான ஆவினில் பால் விலை உயர்த்தியது ஏழைகள் பால் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவே பால் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். பால் பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் இயக்கம் தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்றது. இதில், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, தருமபுரி நகர செயலாளர் நிர்மலா ராணி, ஒன்றிய தலைவர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்றனர்.
மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை, நவ. 15 – நூறு நாள் வேலைத்திட்டத்தை நகர்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும், வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். முன்னதாக அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜோதி மணி, செயலாளர் சுதா, மாதர் சங்க தெற்கு நகர தலைவர் துளசிமணி, செயலாளர் சாந்தா ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். இதில், மதுக்கரை பகுதி திருமலையாம் பாளையம், மாரி செட்டிபதி, காளி யாபுரம் உள்ளிட்ட பகுதிகள் முழு மையான கிராமங்களை உள்ள டக்கியதாகும். மேலும் விவசாய பூமி மற்றும் விவசாய சார்ந்த தொழில் நிறைந்த பகுதியாக இப் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவாக்கிட வேண்டும். மேலும், இலவச மனைப்பட்டா கேட்டு காத் திருக்கும் எளிய மக்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி மனுவினை அளித்தனர். இப்போராட்டத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்று கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.