districts

உடுமலை நகராட்சி விரிவாக்கம் செய்யும் போது ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் அறிவிப்பை செயல்படுத்திடுக

உடுமலை, ஜன. 4- உடுமலை ஒன்றியத்தை நிர்வாக  வசதிக்காக இரண்டாக பிரித்து உடு மலை மற்றும் எரிசனம்பட்டியை தலைமையிடமாக செயல்பட வேண் டும் என்று கோரிக்கை  இன்று  வரை பல ஆண்டுகள் கிடப்பில் உள்ளதை உடனடியாக நடைமுறை படுத்த சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை ஒன்றியத்தை நிர்வாக  வசதிக்கும் ஊராட்சிகளின் வளர்ச் சியை வேகப்படுத்தவும், ஒன்றிய பகுதியை இரண்டாக பிரிக்கும் திட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 2014-ல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற திட்டம் தற்பொழுது வரை நடை முறை படுத்தாமல் உள்ளது. இத னால், மக்களுக்கு சென்றடைய வேண்டிய வளர்ச்சி பணிகள் பாதிக் கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.  உடுமலை ஊராட்சி ஒன்றியம்  1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட் டது. இதில் 38 ஊராட்சிகள் 110க்கும்  மேற்பட்ட சிறிய கிராமங்கள் மற்றும்  மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக உடுமலை உள்ளது.

அதிக மக்கள் தொகை, பரப்ப ளவும் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நிர்வாக நடைமுறைக் கும், ஒன்றிய பொது நிதி அனைத்து  பகுதிக்கும் பரவலாக கொண்டு செல்லும் வகையில், மேற்கு பகுதி யான எரிசனம்பட்டியை தலைமையி டமாக கொண்டு பிரிக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்தது.  இதனையடுத்து பொதுமக்கள்  மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கபட்டது. இதன்படி, எரிசனம்பட்டி தலை மையிடமாக கொண்ட ஒன்றியத் தில் தேவனூர்புதூர், செல்லப்பாளை யம், புங்கமுத்தூர், ராவணாபுரம், எரிசனம்பட்டி, உடுக்கம்பாளையம், பாப்பனூத்து, கொடுக்கியம், தின் னப்பட்டி, அந்தியூர், ஆர்.வேலூர், வடபூதிநத்தம், பெரியவளவாடி, ரெட்டிபாளையம், தீபாலபட்டி, ஜிலேப்பிநாயக்கன் பாளையம், மொடக்குபட்டி என 17 ஊராட்சி கள்  மற்றும் 40க்கும் மேற்பட்ட சிறிய  கிராமங்கள் உள்ளது. இந்த  ஒன்றிய கவுன்சில் வார்டுகள்  எரிசனம்பட்டியை தலைமையிடமாக கொண்ட ஊராட்சி ஒன்றிய பகுதி யாக அமைப்பது எனவும்,  உடுமலை ஒன்றியத்தில்  பள்ளபா ளையம், குரல்குட்டை, ஆலாம்பா ளையம்,ஜல்லிபட்டி, குறிச்சிக் கோட்டை, குருவப்பநாயக்கனூர், துப்பலப்பட்டி, ஆண்டியகவுண் டனூர், சின்னகுமாரபாளையம், மனுப்பட்டி, எலையமுத்தூர், கல் லாபுரம் என 12 ஊராட்சிகள் மற்றும் அறுபதுக்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் ஒன்றிய கவுன்சில் வார்டுகள் என்ற அடிப்படையில் பிரிக்க வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்து  கேட்பு கூட்டத்தில் செயல் திட்ட ஆய்வறிக்கையை உடுமலை ஒன்றி யத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, அரசுக்கு அறிக்கை தரப்பட்டு உள்ளது.  இந்நிலையில், உடுமலை நக ராட்சி எல்லைப்பகுதியான கணக் கம்பாளையம், பெரிய கோட்டை, சின்னவீரம்பட்டி, போடிபட்டி, குறுச் சேரி, கண்ணமநாயக்கனூர் 1-2, ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணறு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக் கப்போவதாக செய்திகள் வருகிறது. இந்நிலையில் தாமதப்படுத்தாமல் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர் வாகத்தை பிரித்தால், நிர்வாக நடைமுறைக்கும் கிராமங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் இருக்கும் உடுமலை ஒன்றிய பிரிப்பு நடவடிக்கையை தாமதப்படுத்தாமல் செய்ய வேண் டும் என்கிற கோரிக்கை வலுத் துள்ளது.