districts

img

பில்லூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

மேட்டுப்பாளையம், ஜூலை 14- தொடர் மழையின் காரணமாக நிரம்பிய பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானியாற்றில் வெளி யேற்றப்படுகிறது. இதனால், ஆற்றின் கரையோர பகுதி மக்க ளுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதி களான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில  நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் கிடு கிடு வென உயர துவங்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி யுள்ளது. அணையின் மொத்த நீர் தேக்க உயரமான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்டம் 97.5 அடியை கடந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 12 ஆயி ரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து அதன் நீர் வரத்தான வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையிலிருந்து தொடர்ச்சி யாக தண்ணீர் வெளியேற்றப் படுவதால் ஆற்றின் வேகம் அதிக ரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.