உதகை, மே 17- உதகை அருகே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விடை எழுத ஆசிரியர் கள் உதவிய விவகாரத்தில், 32 மாண வர்களின் தேர்வு முடிவு வெளியிடப் பட்டு உள்ளது. இதில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் சாம்ராஜ் பள்ளியில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி யன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக் கான கணித பாடத்தேர்வு நடைபெற்றது. அப்போது சில மாணவர்கள் விடை எழுதுவதற்காக, கண்காணிப்பு பணி யில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமை யில் அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். தொடர்ந்து அறை கண்காணிப்பா ளர்களாக பணிபுரிந்த ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணி யாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே கடந்த மே 8 ஆம் தேதியன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அந்த பள்ளி யில் தேர்வு எழுதிய 34 மாணவர்கள் கணித பாடத்தில் தோல்வி அடைந்த தாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாண வர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், 2 மாணவர்கள் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் மற்ற மாண வர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதன் பின்னர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி மற்றும் அதிகாரிகள், அந்த பள் ளிக்கு சென்று 34 மாணவர்கள், பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரி யர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகி யோரிடம் விசாரணை மேற்கொண்ட னர். அதன் அறிக்கை உயர் அதிகாரிக ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க தாமதமானதால், மாணவர்களின் மேற் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி பெற் றோர் மற்றும் மாணவர்கள் உதகையி லுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். அப்போது இதுகுறித்து சென்னை தேர்வு துறை இயக்ககம் விசா ரணை நடத்தி வருகிறது. ஓரிரு நாட்க ளில் தீர்வு காணப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வா யன்று சாம்ராஜ் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 2 மாணவர்களை தவிர, 32 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னை தேர்வு துறை இயக்ககம் மூலம் தேர்வு முடிவு விவரம் பள்ளி மின் னஞ்சலுக்கு அனுப்பப்பட்டது. பள்ளி அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டது. மேலும், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. இதில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தார். மற்ற 31 பேரும் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றனர்.