districts

img

முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்

சேலம், ஏப்.3- ஓய்வூதிய பாகுபாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய  வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத் தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஓஆர்ஓபியில் செயல்படுத்தப்பட்ட ஓய்வூதிய பாகுபாடு எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து கொண்டிருக்கும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வூதிய பாகுபாட்டை உடன டியாக நிவர்த்தி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதி யம் உடனடியாக செயல்படுத்த வேண்டும், அனைத்து ரேங் குக்கும் சமமாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சரவணன் தலைமை ஏற்றார். இதில், 100க்கும் மேற் பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் பாரபட்சத்தை கண்டித்து முழக் கங்களை எழுப்பினர்.