ஈரோடு, ஆக.23- மோடி அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தானாகவே முன் வந்து வழக்கு தொடுக்க வேண்டும். பதவி போன பின் மோடி கம்பி எண்ணும் காலம் வரும் என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங் கோவன் தெரிவித்தார். ஈரோட்டில் அவரது இல்லத்தில் பத்தி ரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இதுவரை நடக்காத மிகப்பெரிய ஊழல் மோடி செய் திருக்கிறார். நாடு முழுவதும் சாலைகள் போடும் திட்டத்தைச் சொல்லி கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்றிருக் கிறார். அதுமட்டுமல்ல, சுங்க சாவடிகளில் பணம் வசூலிப்பதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. மேலும், 88ஆயிரம் இறந்து போன நபர் களின் பெயரை உபயோகப்படுத்தி காப்பீடு என்ற பெயரில் பணத்தை எடுத்திருக்கிறார் கள். கண்டிப்பாக, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும். மோடி பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப் பட்டவுடன் கம்பி எண்ணுகின்ற பணிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதி களே முன்வந்து மோடியின் அரசாங்கத்தின் மீது ஊழல் செய்ததற்காக வழக்கு தொடுக்க வேண்டும். ஏனென்றால் மத்திய தணிக்கை ஆணையர் இந்த ஊழல்களைப் பற்றி யெல்லாம் விபரமாக சொல்லியிருக் கிறார்கள் என்றார்.