உடுமலை, அக்.13- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரி சாராயம் மற்றும் எத்தனால் உற்பத்தியை, அமைச் சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல் விழி செல்வராஜ் ஆகியோர் ஞாயி றன்று துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் தாலூகா, கிருஷ்ணாபுரத் தில் அமைந்துள்ள அமராவதி கூட்டு றவு சர்க்கரை ஆலை, தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட முதல் கூட்டுறவு சர்க் கரை ஆலையாகும். 1961 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலை பல ஆண்டுகளாக சிறப்பாக செயல் பட்டு வந்தது. மிகவும் பழமையான இயந்திரங்கள் என்பதால் சமீபத் தில் அரவை இயந்திரங்கள் பழு தாகி நின்றது. இந்த ஆலையை புதுப்பிக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்தபோது, அதற்காக ரூ.160 கோடி தேவை என ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக் கப்பட்டது. இதனிடையே, ஆலை யிலிருந்து வரும் கழிவுபாகையை கொண்டு, எத்தனால் மற்றும் எரி சாராயம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது கரும்பு அரவை நிறுத்தப்பட்ட காரணத் தால் வடிப்பாலையும் செயல்படா மல் இருந்தது. இந்நிலையில், முதற் கட்டமாக வடிப்பாலையை இயக்கி, எத்தனால் மற்றும் எரி சாராயம் உற்பத்தி செய்து, ஆலைக்கு வருவாய் ஈட்ட வேண் டும் என்ற முயற்சி ஞாயிறன்று துவங்கப்பட்டது. இதற்காக அரூர் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க் கரை ஆலை மற்றும் திருப்பத்தூர் சர்க்கரை ஆலை ஆகிய ஆலை களிலிருந்து கழிவுப்பாகு பெறப் பட்டு, வடிப்பாலை இயக்கப்பட் டது. இதன்மூலம் உற்பத்தியாகும் எத்தனால் மற்றும் எரி சாராயத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற் பனை செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது. முன்னதாக, எரி சாராய உற்பத் தியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அமராவதி சர்க்கரை ஆலையின் செயல் ஆட்சியர் மீனா அருள், முன் ளாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெய ராமகிருஷ்ணன், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி ஆகியோர் உடனிருந்த னர்.
இதன்பின் அமைச்சர் சாமி நாதன் செய்தியாளர்களிடம் பேசு கையில், அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலையில் 3507 மெட்ரிக் டன் கழிவுப்பாகு இருப்பு உள்ளதாக வும் இதைக் கொண்டு ஆலை இயக்கப்படும் என்றும், நீண்ட காலம் ஆகிவிட்ட காரணத்தால் அரவை இயந்திரங்கள் பழுத டைந்த காரணத்தால் கரும்பு ஆலையை இயக்க முடியாமல் உள் ளது. ஆலையை புதுப்பிக்க ரூ.100 கோடிக்கும் மேல் தேவைப்படுவ தால், முதற்கட்டமாக இந்த வடிப் பாலையை இயக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். படிப்படி யாக சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என் றார். இதுகுறித்து அப்பகுதி விவசா யிகள் கூறுகையில், தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை யான அமராவதி ஆலையில் உற் பத்தியை நிறுத்தி, இரண்டு ஆண்டு களுக்கு மேல் ஆகிறது. இந்த ஆலை இரண்டு வருடங்கள் இயங்கி இருந் தால், வடிப்பாலைக்கு தேவை யான கழிவுப்பாகு மற்ற ஆலை களில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எனவே, மூடப்பட்ட ஆலையை புதுப்பிக்க 80 கோடி ரூபாயும், ஆலையை நடைமுறைப்படுத்த ரூ.86 கோடி என மொத்தமாக ரூ.166 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்கள்.