districts

img

ஈரோடு கிழக்கு தொகுதி: திமுக வாக்கு சேகரிப்பு

ஈரோடு, ஜன. 21- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் காங் கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு  அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும்  சு.முத்துசாமி ஆகியோர் சனியன்று வாக்கு சேகரிப்பை தொடங்கினர். ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியான காங் கிரஸ் கட்சிக்கு மீண்டும் தொகுதி யில் போட்டியிட வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் நடத்தை விதிகள் அம லுக்கு வந்ததைப் போல திமுக உடனடியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியது. மறுநாளே வாக்கு சேகரிப்பை தொடங்கியது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சு.முத்துசாமி ஆகியோர் தலை மையில் பெரியார் நகரில் வாக்கு சேகரிப்பு தொடங்கியது. நகர் முழுவதும் வீடு வீடாக காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு ஆதர வாக வாக்கு சேகரித்தனர். கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர்  பகுதிகளில் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறிய தாவது, ஏற்கனவே வெற்றி பெற்ற இத்தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்துள்ளோம். கழகத் தோழர்களுக்கு உதவியாக பொது மக்களுக்கு உதவியாக தேர்தல் பணி களை செய்ய இருக்கின்றோம். நிச்சயமாக இந்த தேர்தலில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறு வார். அதற்கு முழுமையாக பணி யாற்றுவோம் என்றார். முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தலையொட்டி சிபிஎம் சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட குழு அலுவலகத்தில் நடை பெற்றது. நகர செயலாளர் பி.சுந்தர ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர் ஆர்.கோமதி  ஆகியோர் உரையாற்றினர். இதில்,  திமுக தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற செய்வது என்றும், அதற்கான பணிகளில் ஈடுபடுவது முடிவு செய்யப்பட்டது.