districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஈரோடு கிழக்கு - வாக்களிக்க வழிகாட்டல்

ஈரோடு, பிப்.24- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும்  27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கா ளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என் றாலும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணங் களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல்  அலுவலர் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை,  புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழி லாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ  காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ்  இந்தியப் தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய  ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில, அரசின் பொதுத்துறை  நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங் களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத் துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் வாக்களிக்கலாம்  என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மூடப்படும்

மாவட்ட கல்வி அலுவலர் தகவல்

கோவை, பிப்.24- அங்கீகாரம் பெறாத எந்த பள்ளியும் செயல்படக் கூடாது என்றும், மார்ச் 15ஆம்  தேதிக்குள் தகுதியான பள்ளிகள் அங்கீகாரம்  பெற்றிருக்க வேண்டும் என கோவை மாவட்ட  கல்வி அலுவலர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள விளை யாட்டுப் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளி களுக்கான அரசின் புதிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக வளா கத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில்  நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு கோவை மாவட்டக் கல்வி அலுவலா் (தனியார் பள்ளிகள்) கீதா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.  இதில், வரும் கல்வியாண்டில் அங்கீ காரம் பெறாத எந்த பள்ளியும் செயல்படக் கூடாது என்றும், மார்ச் 15ஆம் தேதிக்குள் தகுதியான பள்ளிகள் அங்கீகாரம் பெற்றி ருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது. மேலும், அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டுப் பள்ளிகளின் பெயர்கள் மார்ச்  கடைசி வாரம் அறிவிக்கப்படும். அதேநேரம்  தகுதியற்ற பள்ளிகள் ஆய்வின் அடிப்படை யில் மார்ச் முதல் வாரம் முதல் மூடப்படும். விளையாட்டுப் பள்ளிகளுக்கு குறைந்தது 55 சென்ட் இடம் இருக்க வேண்டும். ஆசிரி யர்கள் அனைவரும் மாண்டிசோரி ஆசிரியர்  பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக் கப்பட்ட ஒன்றிய அரசின் பயிற்சி சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதியான பதிப்பாளர்களிடம் புத்த கங்கள் வாங்க வேண்டும். கிளைகள் என்ற  பெயரில் கல்வியை வியாபாரம் ஆக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி புத்தகம் வழங்கக்  கூடாது. இன்டர்நேசனல் போன்ற பெயர் களை விளம்பரத்துக்காக சூட்டக்கூடாது.  மேலும் ஷீட், ஓடு போன்ற தகுதியற்ற  கட்டடங்களில் இயங்கக் கூடாது. மாடி களில் யுகேஜி வகுப்புகளை நடத்தக் கூடாது  என்பது போன்ற விதிகள் வகுக்கப்பட் டுள்ளன. அதேபோல நர்சரி பிரைமரி பள்ளிகளில் எல்கேஜி முதல் மட்டுமே வகுப்புகளை நடத்த  வேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளை நடத்தக்  கூடாது. பள்ளியின் பெயரில் குறைந்தது 16.5  சென்ட் இடம் இருக்க வேண்டும்.  மைதானம்,  கழிப்பிட வசதி இருக்க வேண்டும். பள்ளி  வளாகத்தில் வேறு வகையான பள்ளி, நிறுவனங்கள் இருக்கக் கூடாது. சமச்சீர் கல்வி கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பெற்றோர் - ஆசிரியா் சங்கம் ஏற்படுத்தி ஆண்டுக்கு மூன்று முறை கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல ஓடு, ஷீட் போட்ட கட்ட டங்கள், பழைய கட்டடங்களில் அரசு விதி களை மீறி செயல்படும் பள்ளிகளில் பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கக் கூடாது. கல்வி அலுவலகத்தை தொடா்பு கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளியைப் பற்றிய விவரங்களை அறிந்த பிறகே குழந்தை களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று  மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார். 

அமராவதி அணை நீர்மட்டம் 60 அடியாக சரிந்தது

உடுமலை, பிப்.24- அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை யின்மையால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணை 90 அடி உயரம் கொண்டது.இந்த அணை யில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க  முடியும்.  இந்நிலையில், கடந்த டிசம்பரில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருந் தது. தற்போது, மழையின் மையால், நீர்மட்டம்  60 அடி யாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

சேலம், பிப்.24- மேட்டூர் அணையில் மீன்வளத்தை பெருக்க வியாழ னன்று 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.  மேட்டூர்  அணையில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பதால்,  மீன் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அணையில் உள்ள மீன்களை உரிமம் பெற்றுள்ள மீனவர்களால் பிடிக்கப்பட்டு கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,  அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் காவிரி  ஆற்றில் மீன் வளம் அதிகரித்து கரையோர மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த பணியை தமிழ்நாடு  அரசு மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்  செயல்படுத்தி வருகிறது. இந்த அலுவலகம் சார்பில் மீன்கள் இனப்பெருக்க மையத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி, அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை சீரான இடைவெளியில் மீன் குஞ்சுகள் மேட்டூர்  அணையில் விடுவிக்கப்படுகின்றன. மேட்டூர் அணை கடந்தாண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி நிரம்பியது. அதன் பின்  நீர்மட்டம் சில அடிகள் குறைந்த நிலையில், டிசம்பர்  மாதம் 7ஆம் தேதி நீர்மட்டம் 120 அடியை எட்டியது. அணையில்  தற்போது 100 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வரு கிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் தொடங்கி, தற்போது  வரை 63.86 லட்சம் மீன் குஞ்சுள் அணையில் விடுவிக்கப் பட்டுள்ளன. மேட்டூர் அணையில் மீன் வளத்தை பெருக்கு வதற்காக ஓராண்டில் 76.73 லட்சம் மீன் குஞ்சுகளை அணை யில் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில்  கட்லா 6.02 லட்சம், ரோகு 53.18 லட்சம், மீர்கால் 3.88  லட்சம், கெண்டை 78 ஆயிரம் என 63.86 லட்சம் மீன் உள்பட பல வகையான மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூன் மாதத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி மொத்த மீன்களும் அணையில் விடப்படும். அணையில்  போதிய அளவு நீர் இருப்பதால், மீன்களின் வளர்ச்சி நன்றாக  இருக்கும் என மீன்வளத்துறை சார் ஆய்வாளர் பாலதண்டா யுதம் மற்றும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வங்கி கணக்கில் இருந்து நூதன மோசடி

கோவை, பிப்.24- போலியான லிங்க் அனுப்பி வங்கி கணக்கில் இருந்து  ரூ.9.20 லட்சம் நூதன மோசடி நடைபெற்றது. இதுதொடர்பாக  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை-சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிக் ்குமார் (46). இவர் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு  பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது செல்போன்  எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில் ‘ரிவார்டு’ பெற கீழே  உள்ள லிங்க்கை கிளிக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய அவர் லிங்க்கை கிளிக் செய்தார். அதில்,  மொபைல் ஆப்-பை பதிவிறக்கம் செய்து, தனது வங்கி  கணக்கு உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டார். சிறிது நேரத்தில்  அவரது செல்போனுக்கு ஓடிபி எண் வந்துள்ளது. அதனையும்  உள்ளீடு செய்தார்.  இதனை தொடர்ந்து அவரது வங்கி கணக்கிலிருந்து வெவ்வேறு கட்டங்களாக ரூ.9 லட்சத்தை நூதனமாக மோசடி  செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சசிக்குமார் வங்கியில் விசாரித்த போது, போலியான லிங்க் அனுப்பி யாரோ நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதுகுறித்து சசிக்குமார் கோவை மாநகர காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் 61.58 லட்சம் மோசடி- இருவர் கைது

கோவை, பிப். 24- கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் ரூ61 லட்சம் வரையில் மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக  வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள்(44) என்பவர் பணியாற்றி வருகிறார். அச்சங்கத்தில் எழுத்தராக சுந்தர வடிவேலு (66) என்பவர் பணியாற்றி 2015-ம் ஆண்டு ஓய்வு  பெற்றுள்ளார். பின்னர் தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு  சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் மீண்டும் எழுத்தராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடந்த  2021ஆம் ஆண்டு தணிக்கை நடந்தது. தணிக்கையில் மீன சென்னம்மாள், சுந்தரவடிவேலு ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2015 முதல் 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சங்க  உறுப்பினர்கள் பெற்ற கடன் தொகையை பெற்றுக்கொண்டு  அதை சங்கத்தில் வரவு வைக்காமலும், சங்கத்தின் செலவு களை பொய்யாக கணக்கு எழுதியும் 61 லட்சத்து 58 ஆயிரத்து  994 வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய சங்க துணை பதிவாளர்  அர்த்தநாரீஸ்வரன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அருண் உத்தரவின் பேரில்  மீனசென்னம்மாள் மற்றும் சுந்தரவடிவேலு ஆகியோர்  மீது வழக்குப்பதிவு செய்து  கைது செய்த போலீசார்  இருவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர்.

தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் பயணம்

திருப்பூர், பிப். 24 - மகாராஷ்ராவில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகா மிற்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ மாணவி கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சத்தின் மூலம் நாட்டில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட  மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப் பாடு முகாம் மகாராஷ்ரா மாநிலத்தில் பிப். 26 முதல்  மார்ச் 4 வரை ஏழு நாட்கள் நடைபெறுகிறது. இம்முகா மில், மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான், அசாம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா,  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேகாலயா போன்ற மாநிலங்களில்  இருந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் சுமார்  250 பேர் கலந்து கொள்கிறார்கள். அதில், தமிழ்நாட்டில்  இருந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரி களில் 10  மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய  ஒருமைப்பாடு முகாமிற்கு செல்கின்றனர்.  இதில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மாணவ, மாணவிகள் மூன்று பேர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தி லிருந்து இவர்கள் மூன்று பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட் டுள்ளார்கள். இந்த வாய்ப்பு கல்லூரிக்கு கிடைத்த பெருமை  என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறினார். இந்த மூன்று மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர்  கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள்  மற்றும் அலகு - 2 மாணவ, மாணவிகள் வெள் ளியன்று வழியனுப்பி வைத்தனர்.

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

தாராபுரம், பிப.24- தாராபுரத்தில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு  பேருந்து நீதிமன்ற உத்தரவின்டிபடி ஜப்தி செய்யப்பட்டது. தாராபுரம் ஜவகர் நகரை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது  மகன் முருகன் (33) நகராட்சியில் தூய்மை பணியாளராக பணி யாற்றி வந்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  ஜூலை 22 ஆம் தேதி அன்று தாராபுரத்தில் இருந்து  உடுமலைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தபோது  பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம டைந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில்  பலியான முருகனின் மனைவி மகேஷ் இழப்பீடு கேட்டு  தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.டி.சேகர்  மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு நவ.21 ஆம் தேதி முருகன்  குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரத்து 507 ஐ அரசு  போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தர விட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  இழப்பீடு தொகையை உரிய காலத்தில் வழங்கவில்லை.  இதையடுத்து மனுதாரர் நீதிமன்ற உத்தரவை நிறை வேற்ற கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அந்த  மனுவை விசாரித்த சார்பு நீதிபதி எம்.தர்மபிரபு முருகன்  குடும்பத்திற்கு நஷ்டஈட்டு தொகையாக ரூ.27 லட்சத்து  21 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் இருந்து மதுரை செல்வதற்காக தாராபுரம் புதிய பேருந்து நிலையம் வந்த அரசு பேருந்தை சார்பு நீதிமன்ற அமீனா சுதா மணி ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.