ஈரோடு, செப்.19- ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் பிற மாநில தொழிலாளர்களுக்கு உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள் ளார். பீகார் மாநில தொழிலாளர்களை ஏமாற்றி கடத்தி பணம் பறித்த வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜவகர், வீரப்பன்சத்திரம் காவல் நிலை யத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறுகையில், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேர ளாவுக்கு வேலை தேடி வருபவர்களை குறி வைத்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் ஏமாற்றி பணம் பறிக்கும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி ஈரோட்டில் நடந்த ஒரு கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்று உறவினர் கள் மூலம் பறிக்கிறார்கள். இதனால் பல ரும் போலீசில் புகார் கூறுவது இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தொடர்ந்து கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் கள். இந்த வழக்கின் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பணம் அனுப்பிய வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றை வைத்து குற்றவாளிகளை மடக்கினோம். பிற மாநில தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் இதுபோன்று பாதிக்கப்பட் டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது, என்றார். அப்போது அவருடன் துணை காவல் கண்கா ணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர் ராஜா பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.