ஈரோடு, டிச. 6- ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங் கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஈரோடு விபிசி நினைவகத்தில் புதனன்று நடைபெற்றது. சிஐடியு ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் சார்பில் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் சங்க தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கே.கனகராஜ் முகாமை தொடக்கி வைத் தார். திரளான ஓட்டுநர்கள் முகாமில் கலந்து கொண்டு இலவச மாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனை யில் கண்ணாடி தேவைப்படுவோர்க்கு இலவசமாகக் கண் ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமின் முடிவில் பொருளா ளர் ஏ.முருகானந்தம் நன்றி கூறினார். இலவச கண் பரிசோ தனை மற்றும் கண்ணாடி வழங்கும் முகாம் வியாழனன்றும் நடைபெற உள்ளது.