districts

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திடுக மாதர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, ஜுலை 31- அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஒன்றிய, மாநில அரசுகள் கட்டுப்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.  மாதர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 13 ஆவது மாநாடு கோபிச்செட்டிபாளையம் ராம் நகரில் மாவட்ட தலைவர் பா.லலிதா தலைமையில் நடைபெற்றது. கோபி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை மாநில செயலாளர் ஏ.ராதிகா தொடங்கி வைத் தார். மாநாட்டு கொடியை சரோஜா ஏற்றி  வைத்தார். மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிர சன்னா வேலை அறிக்கையும், பொருளாளர்  கே.கொங்குநதி வரவு-செலவு அறிக்கையும்  முன்வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பி னர் வி.தனலட்சுமி வாழ்த்துரையாற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையினை தடுத்து நிறுத்த வேண்டும். மகளிர் குழு என்ற பெயரில் பெண்களை பாதிக்கும் நுண்நிதி கடன் நிறுவனங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களை வாட்டி வதைக்கும் கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வினை குறைத்திட வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதையடுத்து சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவராக பி.எஸ்.பிரசன்னா, செயலாள ராக பா.லலிதா, பொருளாளராக எஸ்.கீதா,  துணைத்தலைவராக ஆர்.கோமதி, துணை  செயலாளராக ஆர்.மல்லிகா உள்ளிட்ட 15  பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் வி.பிரமிளா நிறைவுரையாற்றினார்.