districts

ஒன்றிய பாஜக அரசின் பாராமுகத்தில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

எதிர்க்கட்சி ஆட்சி செய்கிற மாநி லங்களின் கோரிக்கைகளை புறந்தள் ளுவது, கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம்  செய்வது, கோடிகளை நன்கொடை யாக வாங்கிக்குவிப்பது என்பதே பத் தாண்டு கால பாஜக ஆட்சியின் லட் சணம். தொழிலாளர் நலன், விவசா யிகள் நலன், மக்கள் நலன், மாணவர் கள் நலன் என எதைப்பற்றியும் சிந்திக் காத ஒரு ஆட்சி இருக்கும் என்றால்  அது ஒன்றிய மோடி அரசு மட்டுமே  என்பது கண்கூடு. அந்த வரிசையில்  ஒன்றிய பாஜக அரசின் பாராமுகத்தால்  அரசு கல்லூரியாக வேண்டிய சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தற்போதுவரை உத் தரவு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.  சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஏழை  மாணவர்கள் உயர் கல்வி பெற வேண் டும் என்ற உயரிய நோக்கில் 1954 ஆம்  ஆண்டு மகாஜன கல்லூரி என்ற பெய ரில் தொடங்கப்பட்டது. தந்தை பெரி யார் இக்கல்லூரியைத் திறந்து வைத்து,  முதல் கவுரவ தலைவராக இருந்து செயல்பட்டார். அன்றே  கல்லூரிக்கு ரூபாய்.1 லட்சம் நிதியளித்தார். 52 ஏக்கர்  நிலப்பரப்பைக் கொண்ட இக்கல்லூ ரியில் 17 பாடப்பிரிவுகள் உள்ளன. 3 முது நிலை பாடப்பிரிவுகளும் செயல்படு கின்றன. 2006 முதல் பெண்களும் சேர்க் கப்பட்டனர். தற்சமயம் 1375 பேர் பயில் கின்றனர். பெண் கல்வியை வலியுறுத் திய பெரியாரின் கனவு நனவாக்கப்பட் டுள்ளது.  இந்நிலையில், தொடர்ந்து செயல் பட முடியாத நிலையில் இக்கல்லு ரியை தனியார் கைப்பற்றும் முயற்சி நடந்தது. ஆசிரியர் சங்கத்தினர் நீதிமன் றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தி னர். மேலும், அரசு கல்லூரியாக  மாற்ற  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது பல போராட்டங்கள் நடைபெற்றன. இத னையடுத்து, அமைச்சர் சு.முத்துசாமி யின் முயற்சியால் அரசு கல்லூரி ஆக்கு வதற்கான ஆளுநரின் பரிந்துரை பெறப் பட்டது. கோப்பு டெல்லிக்கு அனுப்பப் பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக் காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்கி றது.  இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தி டம் கேட்டபொழுது, இக்கல்லூரியில் அனைத்து துறைகளிலும் எம்பில், பிஎச்டி பிரிவுகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் செயல்படுகின்றன. இவற்றிற்கு தனியார் கல்லூரிகளில் (சுமார் 40 ஆயிரம் முதல்) பல ஆயி ரங்கள் கட்டணங்களாகப் பெறப்படு கிறது. ஆனால், சிஎன்சியில் எம்பில் லுக்கு ரூ.5000, பிஎச்டிக்கு 6,500 மட் டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு பெறப்படுகிறது. 220 மாணவர்கள் முழு  நேரமாகவும், பகுதி நேரமாகவும் சேர்ந் துள்ளனர்.  தமிழகத்தில் சுயநிதிப் பிரிவு  இல்லாத ஒரே கல்லூரி இது. ஈரோடு மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி இல்லை என்ற நிலையில், நிதி நெருக் கடியுடன் செயல்பட்டு வரும் இக்கல்லூ ரியை அரசு கல்லூரியாக மாற்றப்பட வேண்டும் என்கிற நியாயமான கோரிக் கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றனர். இதுகுறித்து கல்லூரியின் முன் னாள் மாணவர் ப.மாரிமுத்துவிடம் கேட் டபொழுது, 2014 இல் அரசு கல்லூரி யாக அறிவிக்க வேண்டும் என மாணவர் கள் 16 நாட்கள் வீரம் செறிந்த போராட் டத்தை நடத்தினர். மேலும் காலவரை யற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட னர். அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக  இருந்த லாசர், மறைந்த கே.தங்கவேல்.  இன்று மாநிலச் செயலாளராக செயல் பட்டு வரும் கே.பாலகிருஷ்ணன் ஆகி யோர் மாணவர்களின் போராட்டத்தை சட்டமன்றத்தில் பேசினர். மேலும் சிஐ டியு தொழிற்சங்கம், மாதர் சங்கம் உள் ளிட்ட அமைப்புகளும் மாணவர்க ளுக்கு ஆதரவு தெரிவித்தனர். போராட் டம் தீவிரமடைந்து வந்த நிலையில், இதனை ஒடுக்குவதற்காக, என்னை முதல் நபராகக் கொண்டு 10 பேர் மீது  பொய் வழக்கு போட்டனர். பின்னர்  அந்த வழக்கில் இருந்து விடுதலை செய் யப்பட்டோம். தற்போது பொறுப்பேற் றுள்ள திமுக அரசு அரசு கல்லூரியாக் கப்படும் என அறிவித்துள்ளது இது மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்றார். அமைச்சர் சு.முத்துசாமி இதுகு றித்து கூறுகையில், சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டு, கவர்னரிடம் அனுப்பப் பட்டது. அவர் கேட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டு கோப்பு ஒன்றிய அர சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்களா எனத் தெரியவில்லை. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்த பிறகே அரசாணை  வெளியிடப்பட்டு அரசு கல்லூரியாக அறிவிக்கப்படும். தொடர்ந்து இதற் கான முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறோம் என்றார். ஏன் இவ்வளவு தாமதம் என கேள்வி  எழுந்தால், அதற்கு ஒரே பதில் ஒன்றிய  அரசு பல வகைகளில் தமிழகத்தை வஞ் சித்து வருகிறது. அந்த வரிசையில் இது வும் ஒன்று என்கின்றனர் கல்வியா ளர்கள். முதல் தலைமுறை வாக்காளர்க ளும், இக்கல்லூரியில் பயின்று அரசின்  பல உயர் பதவிகளுக்குச் சென்றவர்க ளும், அவர்களது வாரிசுகளும் விரை வில் ஒற்றை விரலால் ஒன்றிய பாஜக  அரசை வீட்டுக்கு அனுப்புவது திண் ணம். - எஸ்.சக்திவேல்