districts

2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு - கோவை பயணிகள் ரயில் இயக்கம்

கோவை, ஏப்.1- ஈரோடு - கோவை பயணிகள் ரயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண் டும் இயக்கப்பட்டதால், ரயில் பய ணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து தினமும் கோவைக்கு காலை 7.15 மணிக்கு திருப்பூர் வழியாக பயணிகள் ரயில்  இயக்கப்பட்டு வந்தது. இதேபோல், கோவையில் இருந்து மீண்டும் மாலை 6.30 மணிக்கு ஈரோட்டுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந் தது. இந்த ரயிலில் திருப்பூர் மற்றும் கோவைக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளர் கள் மற்றும் பொதுமக்கள் சென்று வந்தனர். பேருந்து கட்டணத்தை விட குறைந்த கட்டணம் என்பதா லும், சிரமம் இன்றி பயணம் செய்ய லாம் என்பதாலும், இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், கொரோனா தொற்றால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த பயணிகள் ரயில் நிறுத்தப் பட்டது. இதனால் கோவை, திருப்பூ ருக்கு வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளா கினர். இதனால், வேறு வழியின்றி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக் கள் பேருந்துகளில் சென்று வந்த னர். பேருந்துகளில் கூட்டம் அதிக மாக இருப்பதாலும், ரயில் கட்ட ணத்தை விட அதிக கட்டணம் வசூ லிப்பதாலும், நிறுத்தப்பட்ட ஈரோடு -  கோவை பயணிகள் ரயிலை மீண் டும் இயக்க வேண்டும் என்று  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத் திருந்தார். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து  வருவதால், ஒன்றிய அரசு கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட் டிருந்த ரயில்கள் படிப்படியாக மீண் டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, ஈரோடு-கோவை பயணிகள் ரயிலும் வெள்ளியன்று முதல் இயங்கத் தொடங்கியது. இந்த ரயிலில் திருப்பூர், கோவைக்கு செல் லும் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பயணம் செய்தனர். அதே நேரம், இந்த பயணிகள் ரயிலில் முன்பு 10 பெட்டிகள் இணைக்கப் பட்டு இருந்தன. ஆனால், தற்போது 6 பெட்டிகள் மட்டுமே இணைக்கப் பட்டிருந்ததாலும், ரயில் கட்டண மும் உயர்த்தப்பட்டிருந்ததாலும் பய ணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி னர். இதுகுறித்து, ரயிலில் பயணம் செய்த பயணிகள் கூறியதாவது, கடந்த 2 வருடமாக நிறுத்தப்பட்டி ருந்த ஈரோடு-கோவை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், முன்பு ரயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்வதற்கு ரூ.15, கோவை செல்வதற்கு ரூ.25  கட்ட ணம் இருந்தது. ஆனால், தற்போது திருப்பூர் செல்வதற்கு ரூ.35, கோவை  செல்வதற்கு ரூ.50 கட்டணம் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த கட்டணத்தை முன்பு இருந் ததை போல குறைத்தால் அதிக மான பயணிகள் சென்று வர ஏது வாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.