districts

img

ஏற்காடு மலை பகுதியில் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

சேலம், ஜூன் 8- ஏற்காட்டில் கடந்த சில மாதங்களாக கள்ளச் சாராயம்  அதிக அளவில் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து சேலம் துணைக் காவல்  கண்காணிப்பாளர் தையல் நாயகி தலைமையிலான போலீ சார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் பல  இடங்களில் கள்ளச் சாராயம் கண்டு பிடித்து அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழனன்று ஏற்காடு கொளகூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ராமர் (27) என்ப வர் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  ஏற்காடு காவல் துணை ஆய் வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் கொளகூர்  பகுதியில் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 500லிட்டர் சாராயம் ஊறலை கைப்பற்றப்பட்டு அழிக்கப் பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் ராமர் தலைமறைவான நிலையில் போலீசார் வழக்கு பதிவு  செய்து தேடி வருகின்றனர்.