districts

img

பாலர் பூங்கா நடத்திய சமத்துவ பொங்கல் விழா குழந்தைகள் உற்சாகக் கொண்டாட்டம்

திருப்பூர், ஜன.17- சமத்துவம் சகோதரத்துவத்தை  வலியுறுத்தி பாலர் பூங்காவின் சார்பில்  திருப்பூர் மாவட்டம் முழுவதும்  குழந் தைகள் பொங்கல் வைத்து கொண்டா டினர். திருப்பூர் மாவட்டத்தில் சமத்துவம்,  சகோதரத்துவத்தை வலியுறுத்தி பாலர்  பூங்காவின் சார்பில் நடைபெற்ற பொங் கல் நிகழ்வுகளில் 500க்கும் மேற்பட்ட  குழந்தைகள், பெற்றோர்கள், பொது மக்கள் உட்பட பல்வேறு அமைப்புக ளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப் பித்துள்ளனர். கருமாரபாளையம்: திருப்பூர் வடக்கு கருமாரபாளை யம் பகுதியில் பாலர் பூங்கா மற்றும் வேர் கள் அமைப்பு இணைந்து மூளிகுளத் தின் கரையில் பொங்கல் வைக்கும்  நிகழ்ச்சியை நடத்தினர். இதில், பாலர்  பூங்கா குழந்தைகள் சிலம்பம், கும்மி  போன்ற நிகழ்வுகளுடன் கொண்டாடி னர். இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புக ளின் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற் றிருந்தனர். அதேபோல் ஜி.கே லே அவுட் பகுதி யில் பாரதி பாலர் பூங்காவின் சார்பில்  பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற் றது. மேலும், போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டது. இந்நிகழ்வில் குழந்தைகள்,  பெரியவர்கள் என 150க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.  திருப்பூர் மாவட்டத்தில்  அவிநாசி,  பல்லடம், உடுமலை, வடக்கு நகரம்,  வடக்கு ஒன்றிய பகுதிகளில் 12 க்கும்  மேற்பட்ட இடங்களில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.