திருப்பூர், ஜூன் 5- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி, நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் ரயில் நிலையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட் டது. நிகழ்ச்சியில் அலகு -2 ஒருங்கிணைப்பா ளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக உதவி நிலைய மேலா ளர் (வணிகம்) சங்கர் கலந்து கொண்டு சிறப் புரையாற்றினார். தொடர்ந்து அவர் பேசுகை யில், இன்றைய சூழலில் சுற்றுப்புறத்தை அனைவரும் காக்க வேண்டும். சுற்றுப்பு றம் தூய்மையாக இருந்தால் நோய் இல்லா மல் நாம் வாழமுடியும். பள்ளி, கல்லூரி மாண வர்கள் மரம் நடவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். நடவு செய்த மரங்களை பராம ரிக்க தவறக்கூடாது என தெரிவித்தார். தொடர்ந்து, முதன்மை வணிக ஆய்வா ளர் இளங்கோ, சேலம் ரயில்வே கோட்ட பய னாளர்கள் அறிவுரை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். பின்னர், மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மெளன நாடகத்தை அரங் கேற்றினர். மேலும், மாணவ செயலர்கள் அருண்குமார், பாலசுப்பிரமணியன் தலை மையில் மாணவ, மாணவிகள் தூய்மை பணி யில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந் தார்.