கோவை அரசு கலைக்கல்லூரியில், வெள்ளியன்று (இன்று) காலை 9 மணிக்கு, அனைத்து பாடப்பிரிவுகளிலும் காலி இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்தும், இதுவரை அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வு அந்த அந்த துறைகளில் நடைபெறும்.
கோவை, ஜூன் 15- தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழக மாணவர்கள் கற்கும் போதே தேன் பதப்படுத்தி வணிகம் செய்து லாபம் பெறும் திட்டத்தை துவக்கி உள்ளது. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் வேளாண் பூச்சி யியல் துறை சார்பில், இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை மற் றும் வேளாண் வணிக நிர்வாகம் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியருக்கு, அனுபவ கற்றல் மூலம், வணிக தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின் கீழ், மாணவர் களை தொழில் முனைவோராக உரு வாக்க, விடுமுறை நாட்களில் தேன் பதப்படுத்தி, கலன்களில் நிரப்பி விற் பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை மாணவர்களிடையே பகிர்ந்து கொள்ள ஒரு தேன் பதப் படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி துவக்கி வைத்தார். மூல தேனில் 20 சதவிகிதத்திற் கும் அதிகமான ஈரப்பதம் மற்றும் ஈஸ்ட் செல்கள் உள்ளன. இது சேமிப் பின் போது தேனின் நொதித்தல் மற் றும் சிதைவுக்கு வழிவகுக்கும். மூல தேனில் உள்ள ஈஸ்ட் செல்களை அகற்றவும், ஈரப்பதத்தை 20 சதவி கிதத்திற்கும் குறைக்கவும், இரண்டு ஆண்டுகளுக்கு சேமிக்கக்கூடிய நல்ல தரமான தேனைப் பெறலாம். தேன் பதப்படுத்தும் வழிமுறைக ளான பிரித்தெடுத்தல், சூடாக்குதல், வடிகட்டுதல் மற்றும் பாட்டிலில் அடைத்தல் குறித்து, மாணவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்த னர். மேலும், பல்வேறு தேனின் தூய்மை கண்டறியும் சோதனை களான ஃபிஹே சோதனை, பிரக் டோஸ்-குளுக்கோஸ் விகித சோதனை, ஹைட்ராக்ஸி மெத்தில் ஃபுர்ஃபுரல் சோதனை, மொத்த சர்க் கரை சோதனை மற்றும் ஈரப்பத சோதனை ஆகியவை மாணவர்க ளால் நிரூபிக்கப்பட்டன. இந்நிகழ்வில், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக பதிவாளர் இரா. தமிழ்வேந்தன், வேளாண்மை முதன்மையர் ந.வெங்கடேச பழனிச் சாமி, பயிர் பாதுகாப்பு மைய இயக்கு நர் மூ.சாந்தி உள்ளிட்ட பல்வேறு துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.