districts

img

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு

கோவை, ஜூன் 10- கோடை விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிகள் திறக்கப் பட்டதைத் தொடர்ந்து, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் கோடை விடு முறைக்குப்பின் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப் படுவது வழக்கம். ஆனால், இந் தாண்டு ஜூன் 4 ஆம் தேதி நாடாளு மன்றத் தேர்தல் முடிவுகள் வெளி யானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது. தொடர்ந்து தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட் டதால், ஜூன் 10 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தி ருந்தது. மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்க ணக்கான மாணவர்கள் படிக்கின்ற னர்.

இந்நிலையில், கோடை விடு முறைக்குப்பின்னர் திங்களன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோவை யில் பல்வேறு பள்ளிகளிலும், மாண வர்களை வரவேற்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட இடை வெளிக்குப்பின் நண்பர்களை சந்திக்கப் போகும் மகிழ்ச்சியோடு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளி களுக்குச் சென்றனர். கோவை -  திருச்சி சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் பள்ளியில் மாணவி களை வரவேற்க சக மாணவிகள்  பூக்கள்போல உடை அணிந்து,  இனிப்புகளை வழங்கி உற்சாகப் படுத்தினர். சில பள்ளிகளில், ஆசிரி யர்கள் மேள, தாளம் வாசித்தும்,  பாடல்கள் பாடியும் மாணவர்களை  வரவேற்றனர். சிவப்பு கம்பள வர வேற்பால் மாணவர்கள் மகிழ்ச்சிய டைந்தனர்.

கிரீடம் அணிவித்து வரவேற்பு

சேலம் மாவட்டம், மணக்காடு அரசு ஆரம்பப்பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு, கிரீடம் அணி வித்து, இனிப்புகள் வழங்கி பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் வரவேற்ற னர். மேலும், உயர்நிலை, மேல்நி லைப்பள்ளி மாணவ, மாணவி களுக்கு முதல் நாளிலேயே பள்ளி பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு, வகுப்புகள் துவங்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இனிவரும் காலங்களில் ஆதார் புகைப்படம் எடுத்தல், பெயர் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளும் பள்ளிகளிலே செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி திருவிழா

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள குங்குமூர் மூல தொடக்கப்பள்ளியில் கோடை விடு முறை முடித்து திங்களன்று பள்ளி யின் திறப்பு நாள் திருவிழா போன்று கொண்டாடப்பட்டது. இதில், குழந் தைகள் உறுதிமொழி ஏற்று, ஊராட்சி மன்றத் தலைவர் சுனில் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்நி கழ்வில், முன்னாள் தலைமை ஆசி ரியர் ஜமால் முகமது, எஸ்எம்சி தலைவர் மினிமோள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் உற்சாகம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் திங்க ளன்று பள்ளிகள் திறக்கப்பட்ட தைத் தொடர்ந்து, மாணாக்கர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்கு தல் சிறப்பு முகாம்கள் நடை பெற்றன. ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்க்கு பாடப்புத்தகங் களை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் மாநகராட்சி மேயர் சு.நாக ரத்தினம், முதன்மைக் கல்வி அலு வலர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.