அவிநாசி, ஜன.1- துருக்கியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த அவிநாசி மாணவனுக்கு சனியன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வலுதூக்கும் வீரர், பயிற்சியாளர். இவரது மகன் பிரபு (23), கோவை தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் கடந்த 2016, 2017, 2019ல் பாரதியார் பல்கலைக் கழக அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்ட்டியில், தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் 2019ல், தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப் பதக்கமும், 2019, 2020ல் இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றார். மேலும் 2019, 2020, 2021ல், மாநில அளவிலான, ஜூனியர் பிரிவு வலுதூக்கும் போட்டியில் தங்கமும், அதே ஆண்டுகளில் மாநில அளவிலான சீனியர் பிரிவு போட்டியிலும் தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, துருக்கி இஸ்தான்புல் நகரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, 3 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவிநாசிக்கு சனியன்று வந்திருந்த பிர புக்கு புதிய பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசி கோவிட் இணைந்த கைகள், நல்லது நண்பர் கள் அறக்கட்டளை, பொதுநல அமைப்பு கள், அனைத்து அரசியல் அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், மருத்துவர் கள் குகப்ரியா, பிரகாஷ், பேரூராட்சி ஆய்வாளர் கருப்பசாமி உள்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.