நாமக்கல், ஜூலை 31- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் சிஐடியு சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன் சிஐடியு மாவட்ட பேரவை கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் வீ.சங்கரன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தை, சிஐடியு மாவட்ட உதவிச்செய லாளர் சு.சுரேஷ் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ், பெண் தொழிலா ளர்களுக்கு 50 ஆவது வயதில் பென்சன், விபத்து மரணத் திற்கு நிவாரணம் ரூ.2 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.ஒரு லட்சம், திருமண உதவித்தொகை ரூ.25 ஆயிரம், பிரசவ உத வித்தொகை ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளராக கே.மோகன் தேர்வு செய்யப்பட்டார். இதில், மாவட்ட பொருளாளர் எம். சரவணவேல், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப் பினர் சி.சௌந்தரராஜன் நன்றி கூறினார்.