districts

பொருட்களை தெருவில் வீசிய ஊழியர்கள் சிறைபிடிப்பு

பல்லடம், ஜூன் 29- பல்லடம் அருகே தனியார் வங்கி யில் வாங்கிய வீட்டு கடனில், ஒரு மாத தவணையை கட்ட தவறிய பக் கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதி யவரை வீட்டிலிருந்து வெளியேற்றி, பொருட்களை தெருவில் வீசிய வங்கி ஊழியர்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அருள்புரம், செந்தூர்  காலனியில் கந்தசாமி என்பவர், தனது மனைவி ருக்மணி மற்றும் தனது பேரன்களுடன் வசித்து வருகி றார். 75 வயதான கந்தசாமி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள் ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள “ஈக்விடாஸ்” என்ற தனியார் வங்கி யில் தனது பேரன் தினேஷ் குமார் என்பவரின் பெயரில் ரூ.5 லட்சம் வீட் டுக்கடன் பெற்றுள்ளார். மாதந்தோ றும் ரூ.11 ஆயிரம் வீதம் இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை தவணைத்தொகையை திருப்பி செலுத்தியுள்ளனர். ஜூன் மாதம் 10  ஆம் தேதியன்று கட்ட வேண்டிய தவ ணைத்தொகையை, குடும்ப சூழல் காரணமாக கட்ட முடியவில்லை. இதனிடையே, கடந்த இரண்டு நாட்க ளாக கந்தசாமியின் வீட்டிற்கு வந்த  தினேஷ் மற்றும் மணி என்ற இருவர், தாங்கள் வங்கியில் இருந்து வருவ தாகவும், இந்த மாதம் தவணைத் தொகையை இன்னும் கட்டாததால் உங்கள் வீட்டை பூட்டு போட வந்துள் ளோம் எனவும், வீட்டிலுள்ள டிவி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச்செல்ல உள்ளோம் என தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில், வியாழனன்று கந்தசாமியின் வீட்டிற்கு வந்த இரு வரும் வீட்டிற்கு பூட்டு போட வேண் டும் எனக்கூறி, வீட்டிலிருந்த பொருட்களை வெளியே போட்டு விட்டு பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டுள்ள 75 வயதான கந்தசாமியை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து

 சாலையில் அமர்த்தியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், “ஒரு மாத தவணைத் தொகை கட்டாததற்காக வீட்டுக்கு பூட்டு போடுவீர்களா?” எனக்கூறி இரு வரையும் சிறைபிடித்தனர். மேலும், எந்தவித அடையாள அட்டையும் இல் லாமல் ரவுடிகளைப்போல வயதான நபரை வீட்டிலிருந்து வெளியேற்றி, அடுப்பு முதல் அண்டா வரை சாலை யில் வீசி இருவர் மீதும் பல்லடம் காவல் துறையில் பாதிக்கப்பட்ட குடும் பத்தார் மற்றும் பொதுமக்கள் புகார்  அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த பல்லடம் காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கடனுக்கான  கால அவகாசமும், ஜப்தி போன்ற  நடவடிக்கைக்கான முன்னறிவிப்பு களும், வீட்டின் முன்பு அறிவிப்பு ஒட் டுவது போன்ற பல்வேறு விதிமுறை கள் இருக்கும். இந்நிலையில், அதனை எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கந்துவட்டி கும்பல் போல் நடந்து கொண்ட இந்த வங்கி கிளை இப்பகுதியில் பெரும் அவ நம்பிக்கையை பெற்றுள்ளது.  மேலும், வங்கியை இழுத்து மூடிவிட்டு செல் லுங்கள் என்று அப்பகுதி பொதுமக் கள் வங்கி மேலாளர் மற்றும் துணை மேலாளரை அடிக்காத குறையாக,  ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ள னர்.