தருமபுரி, ஆக.29- நூறுநாள் வேலைக்கு பணம் கொடுத் தால் மட்டுமே வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியரிடம் பணியாளர்கள் புகார் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டத்திற்குட்ட பெரும்பாலை கிராமத்தை சேர்ந்த சுமார் 300 பெண்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில், கலா என்பவர் பணிதள மேற்பார்வையாள ராக பணியாற்றினார். இந்நிலையில், அம்பி கேஸ்வரி என்பவர் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் வேலைக்கு வருவதில்லை. இவருக்கு பதிலாக ஏற் கனவே பணியாற்றிய கலா என்பவரே மேற் பார்வையாளராக பணியாற்றுகிறார். இவர் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி யாற்றும் அனைவரும் ரூ.50 வழங்க வேண்டும் என கூறுகிறார். கொடுக்க முடி யாது என்றால் உங்களுக்கு வேலை இல்லை என்கிறார். எனவே, நூறுநாள் வேலை திட்ட சம்ப ளத்தில் தினந்தோறும் ரூ.50 கேட்கும் நபர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.