districts

img

சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி அவிநாசி வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளிப்பு

அவிநாசி, ஜூன் 21- அவிநாசி பேரூராட்சி தினசரி சந்தை வியா பாரிகள் உரிய பாதுகாப்பு  வழங்கக்கோரி வியாழ னன்று மாலை முற்றுகை யிட்டு மனு அளித்தனர்.  இதனால் பேரூராட்சி அலு வலகத்தில் பரபரப்பு ஏற் பட்டது.  இதுகுறித்து வியா பாரிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  அவி நாசி பழைய பேருந்து நிலை யத்திற்கு பின்புறத்தில், 20  ஆண்டுகளாக தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு  90க்கு மேற்பட்டவர்கள் கடை அமைத் திருந்தனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாகம் கட்டிடம் பழுதடைந்துள்ளது.  எனவே, பேரூராட்சி நிர்வாகம் பழு தடைந்த வணிக வளாகத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் சந்தையும் மாற்ற  முடிவு செய்யப்பட்டன. புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் சந்தையை  இயங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டன. இந்த இடத்தை வியாபாரிகள் சீரமைக்க கடன் வாங்கி  பல மாதங்களாக பணியை மேற்கொண்டனர்.   இந்நிலையில், சமூக விரோதிகளும், மது  அருந்துபவர்களாலும் புதிய சந்தையில் கடைகள் அமைக்க முடியவில்லை. சந்தைக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ள தால் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி கொண்டு சந்தையில் வந்து மது குடிக்கின்றனர்.  மேலும்  சமூக விரோதிகள் தொடர்ந்து வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இச்சந்தையில் பெண் வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். இதனால் பெண் வியாபாரிகள் கடும் அச்சத் திற்குள்ளாகி உள்ளனர்.    எனவே பேரூராட்சி நிர்வாகமும், காவல் துறையினரும் சமூக விரோதிகள், மதுப் பிரியர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை பெற்றக் கொண்ட பேரூராட்சி நிர்வா கத்தினர்  உரிய பாதுகாப்பு நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தனர். இதை யடுத்து வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.