தருமபுரி, டிச.30- சிறுபான்மையின மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பாது காப்பு அளிக்க வேண்டும் என சமூக நல்லிணக்க மேடை வலியுறுத்தி உள்ளது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தருமபுரியில் ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.பெருமாள் தலைமையில் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மண்டல செய லாளர் பொ.மு.நந்தன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் ஒய்.சாதிக்பாஷா, மாவட்ட தலைவர் சுபேதார், அருட் தந்தை ஜேசுதாஸ், ஓய்வுபெற்ற மாவட்ட அஞ்சலக கண்காணிப்பா ளர் ஆர்.கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கடந்த கிறிஸ்து மஸ் தினத்தன்று நாட்டின் பல இடங் களில் தேவாலயங்கள் மீது சங்பரி வார் கும்பல் தாக்குதல் தொடுத்துள் ளனர். ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் மாநாட்டில் இஸ்லா மிய மக்களுக்கு எதிராக இனப்படு கொலை நடத்த பகிரங்கமாக அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும். இதனை சமூக நல்லிணக்க மேடை வன்மை யாகக் கண்டிக்கிறது. இத்தகைய மதவெறி பிரச்சாரங் களைத் தடுத்து நிறுத்தவும், சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஒன்றிய, மாநில அரசு கள் முன்வர வேண்டும் . சிறு பான்மை மக்களுக்கு எதிரான தாக் குதலைக் கண்டித்து வருகிற ஜன.6 ஆம் தேதி தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஜன.30 ஆம் தேதி மகாத்மா காந்தி நினைவு நாளன்று மதவெறி எதிர்ப்புக் கருத் தரங்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.