districts

img

போக்குவரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படியை வழங்கிடுக: ஓய்வூதியர் தின கருத்தங்கில் வலியுறுத்தல்

கோவை, டிச.18- மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில், ஓய்வூதியர் தின  விழா மற்றும் கருத்தரங்கம் பல்வேறு பகுதிகளில் செவ்வாயன்று நடைபெற் றது. மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா மற்றும் கருத்தரங்கம் புதனன்று  கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் சாலை அவினாசிலிங்கம் கல்லூரி  அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத் தரங்கிற்கு, தலைவர் என். சின்னசாமி  தலைமை வகித்தார். பொருளாளர் அ. குடியரசு வரவேற்று பேசினார். மாவட் டச் செயலாளர் என். அரங்கநாதன் துவக்க உரையாற்றினார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். தமிழக அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படி நிலுவை தொகையினை வழங்க வேண் டும். போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு  பெறும் நாளன்று அனைத்து பணப்பயன் களையும் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் ஆர்.சேதுராமன், அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் ஏஐபிஆர்பிஏ மாவட் டச் செயலாளர் தே.சிவராஜ், அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச்  செயலாளர் பி.மகேஸ்வரி, ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என். மாணிக்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூ தியர் சங்கம் மாநில உதவிப் பொருளா ளர் பி.நிசார் அகமது, வருமான வரி  ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஆர்.ஜோதி  ஆகியோர் கருத்துரை வழங்கினர். இவ் விழாவில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்.சின்னசாமிக்கு, நினைவு  பரிசும், கேடயமும் வழங்கி பொன் னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும், சங்கத்தில் 80 வயதை கடந்த மூத்த தோழர்களுக்கு சால்வை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.  ஓய்வூதியர் தின விழா மற்றும் கருத் தரங்கை வாழ்த்தி சிஐடியு கோவை  மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட  துணைத் தலைவர் பி.சுரேந்திரன் நன்றி  கூறினார். இதில் 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.இதே போன்று, எல்ஐசி பென்சனர்கள் சங்கத் தின் சார்பில், கோவை மற்றும் உடு மலைப்பேட்டை இரண்டு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தினரும் பங்கேற்றனர்.  திருச்சி சாலையிலுள்ள கோவை கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கோவைப் பகுதி இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் தலைவர் வி.வி.குமார் தலைமை ஏற்றார். கோவைப் பகுதி  எல்ஐசி பென்சனர் சங்க பொதுச் செய லாளர் பி.வாசுதேவன், கோவைப் பகுதி இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.துளசி தரன் ஆகியோர் உரையாற்றினர். இதில், பென்சனர் சங்கத்தின் இணைச் செயலாளர்கள் டி.ஜான் சுந்தர்ராஜ், சந்திரசேகர் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முடிவில், பி.வி.கல்யாண சுந்தரம் நன்றி கூறினார். இதேபோல் கோவை கோட்டம், உடு மலை கிளை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பாண்டி யன், கே.கே.கிருஷ்ணன், கே.சண்முக சுந்தரம், ராமசாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முடிவில் பார்த்தி பன் நன்றி கூறினார்.

திருப்பூர்

மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு சார்பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் செவ்வாயன்று திருப்பூர் சன்மார்க்க சங்க வளாகத் தில் நடைபெற்றது.  பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்க  மாவட்டத் தலைவர் பி.சௌந்தரபாண் டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம் வரவேற்றார். இதில், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது தொடக்கி வைத்து பேசினார். ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி  ஆசிரியர் நலச் சங்க மாவட்டத் தலைவர் மா.நாட்டராயன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் திருப்பூர் மின் பகிர்மான வட்டச் செயலாளர் பி.ஈ.அச்சுதன், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நலச்சங்க நிர்வாகி பொன்ராஜ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநி லப் பொதுச்செயலாளர் ச.செல்லத் துரை ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதி யர் சங்க மாநிலச் செயலாளர் பி.மகேஸ் வரி நிறைவுரை ஆற்றினார். ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலாளர் ஏ.இராஜேந்திரன் நன்றி கூறினார்.  தருமபுரி தருமபுரி தனியார் திருமண மண்ட பத்தில், செவ்வாயன்று ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் பி.சுப்பிரமணி வரவேற் றார். போக்குவரத்து நல ஓய்வூதியர் அமைப்பின் மாநில இணைச்செயலா ளர் கே.குப்புசாமி துவக்கவுரையாற்றி னார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச் சாமி, செயலாளர் எம்.பெருமாள், மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி, போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்ட இணைச்செயலா ளர் வி.கணபதி, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வி.முருகேசன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சோமசுந்த ரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என்.ஜெயசந்திரன் நிறைவுரையாற்றி னார்.