கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.7- அரூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரிலிருந்து மொரப்பூர், கம்பை நல்லுார், காரிமங்கலம் வழியாக, கிருஷ்ணகிரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், இந்த வழித்தடத்தில் வரும் பேருந்துகளில் எப்போதும் கூட்ட நெரி சல் அதிகளவில் இருப்பதால், மக்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். மேலும், இந்த வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேருந்து காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலையுள்ளது. சில ஆண்டு களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட காரிமங்கலம் வட்டத் தில், மொரப்பூர், கம்பைநல்லுார் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காரிமங்கலம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும், காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கல்லுாரிக்கு மொரப்பூர் பகுதியிலிருந்து ஏராள மான மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே, அரூரில் இருந்து காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரிக்கு, கூடுதலாக பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு
சேலம், பிப்.7- சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்து வமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரி யர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக் கையில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்கள் உள்ளனரா? என்பது குறித்தும், இளநிலை படிப்பான எம்பிபிஎஸ், முதுநிலை எம்எஸ், எம்டி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பேராசிரியர்கள் உள் ளது குறித்தும் ஆய்வு செய்ப்பட்டது.
தொழிலாளி கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் கைது
தருமபுரி, பிப்.7- நல்லம்பள்ளி அருகே கூலித்தொழிலா ளியை கொலை செய்த வழக்கில் தொடர்பு டைய ரியல் எஸ்டேட் அதிபரை காவல் துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடாசலம் (41). கடந்த டிச.5 ஆம் தேதியன்று சவுளூர் கிராமத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில், பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், வெங்கடாசலத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில், தலை மற்றும் உடலில் காயங்களோடு வெங்கடாசலம் மயங்கி கிடந் தார். இதனையறிந்த அவரது உறவினர்கள், வெங்கடாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் வெங்கடாசலம் அனும திக்கப்பட்டு, சுமார் 20 நாட்களுக்கு மேல் அங் கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், உடலில் எவ்வித முன்னேற்றம் ஏற்ப டாததால், மீண்டும் தருமபுரி அரசு மருத்துவம னைக்கு, வெங்கடாசலத்தை கொண்டு வந்து சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்த னர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங் கடாசலம், தருமபுரி அரசு மருத்துவமனை யில் ஜன.7 ஆம் தேதி உயிரிழந்தார். இதுகு றித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்பு டைய பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் (50) என்ப வரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான சிவக் குமார் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தார்ச்சாலையை சீரமைக்க கோரிக்கை
சேலம், பிப்.7- தேவூரிலிருந்து அண்ணமார் கோவில் செல்லும் தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரிலிருந்து அண்ணமார் கோவில் செல்லும் தார்ச்சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக சுண்ணாம்புகரட் டூர், பாருச்சிம்பாளையம், காவேரிப்பட்டி, கே.மேட்டுப்பா ளையம், வெள்ளைப்பிள்ளையார்கோவில், சென்றாயனூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், விளை பொருட்களை விற்பனை செய்ய சந்தைகளுக்கு கனரக வாக னங்களில் எடுத்துச் செல்லவும் விவசாயிகள் சிரமப்படுகின்ற னர். எனவே, இந்த தார்ச்சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளி வியாபாரி கொலை: ஒருவர் கைது
சேலம், பிப்.7- சேலத்தில் வெள்ளி வியாபாரியை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை அருகே உள்ள பாண்டுரங்கன் கோவில் தெரு வைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி சங்கர் (47). கடந்த பிப்2 ஆம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து சங்கர் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ் வழியாக வேகமாக வந்த கார், சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சங்கரை, அருகிலிருந்த வர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில், சங்கர் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி, கொலை செய்தது தெரியவந் தது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் கடந்த பிப்.3 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை காவலர் குடியிருப்பின் அருகே நின்றது தெரி யவந்தது. இதையடுத்து நடைபெற்ற தொடர் விசாரணையில், சங்கரின் சகோதரி வித்யலட் சுமி (41). இவருக்கும் சின்னபுதூரைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி சுபாஷ்பாபு (49) என்பவரு டன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களுக்கு 23 வயதிலும், 12 வயதிலும் இருமகன்கள் உள்ளனர். வித்யாலட்சுமிக்கும், சுபாஷ்பாபுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற் பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தானது. இதையடுத்து, மகன்களு டன் வித்யாலட்சுமி பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். சுபாஷ் பாபு தனது இளைய மகனை பார்க்க பலமுறை முயற்சி செய்தும், சங்கர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனுமதிக் கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சுபாஷ் பாபு கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் கொடுத்து, சங்கரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சுபாஷ் பாபுவை செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவிலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
திருப்பூர், பிப்.7- தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத் தையொட்டி வெள்ளக்கோவிலில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க் கிழமை நடைபெற்றன. கரூர் சாலை காவல் நிலையம் எதிரி லுள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவ லகத்தில் இருந்து சாலைப் பணியாளர் கள் ஊர்வலமாகப் புறப்பட்டு முத்தூர் பிரிவு வழியாக புதிய பேருந்து நிலை யம் வரை சென்று திரும்பினர். ஊர்வ லத்தில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்க வசம் அணிய வேண்டும். கார்களில் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண் டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிக வேகம் ஆபத்தானது. சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பன குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இருசக்கர வாகன நிறுத்தம் ஏலம்
திருப்பூர், பிப்.7- நத்தக்காடையூர் ஊராட் சியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் இன்று (பிப்.8) ஏலம் விடப்பட வுள்ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது. காங்கயம் ஊராட்சி ஒன் றியத்துக்கு உட்பட்ட நத்தக் காடையூரில் காய்கறி வாரச் சந்தை அருகில், இருசக்கர வாகன நிறுத்தம் செயல் பட்டு வருகிறது. இதன் நீளம் 30 மீட்டர், அகலம் 7 மீட்டர் ஆகும். இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டுக்கு ஆயம் வசூல் செய்யும் உரிமம் பெறுவதற்கான பொது ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. மேற்கண்ட இருசக்கர வாகன நிறுத்தம் ஏலம் எடுப்ப வர்கள் சொந்த செலவில் தீப் பிடிக்காத கொட்டகை அமைக்க வேண்டும். 1.4.2024 முதல் 31.3.2025 வரை ஓர் ஆண்டுக்கு மட்டும் ஏலம் விடப்படும். ஏலம் கூறுபவர் கள் ரூ.5 ஆயிரம் முன்வைப்பு தொகையினை வியாழக்கி ழமை காலை 11 மணிக்குள் காங்கயம் ஒன்றிய கருவூ லத்தில் செலுத்தி விட வேண் டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்துள் ளனர்.
காய்கறிகள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
உதகை,பிப். 7- உதகையில் விளையும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி களுக்கு தற்போது கட்டுப்படியாகும் விலை கிடைத்து வரு வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு தமிழ கம் மட்டுமன்றி கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநி லங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதை நம்பி ஆயிரக் கணக்கான ஏக்கர்களில் மலைத் தோட்டக் காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், மேரக்காய், முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். மேலும் பனியின் தாக்கம் காரணமாக காய்கறிகள் அதிகம் அழுகிவிட வாய்ப் புள்ள காரணத்தால் தற்போது விளைந்துள்ள காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயி கள் ஈடுபட்டு வருகின்றனர். கேரட், பீட்ரூட் காய்கறிகள் கிலோ ரூ.25 முதல் ரூ. 30 வரை விற்றுவந்த நிலையில் தற்போது கேரட் கிலோ ஒன்றுக்கு தரத்திற்கேற்ப ரூ. 35 முதல் ரூ.60 வரையிலும், பீட்ரூட் ரூ. 30 முதல் ரூ. 55 வரையிலும் விலை கிடைத்து வருகிறது. இது ஓரளவுக்கு கட்டுப்படியாகும் விலை யாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொது விநியோகத்திட்டக் குறைதீர் முகாம்
ஈரோடு, பிப். 7 - இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈரோடு வட்டத் தில் வீரப்பம்பாளையம், பெருந்துறை வட்டத்தில் மூங்கில்பா ளையம் உள்ளிட்ட பல இடங்களில் நியாயவிலைக்கடை களில் குறைதீர் முகாம் நடைபெறும். இவற்றில் பங்கேற்று புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, பெயர் சேர்த்தல், போன்ற கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இம்மு காம்கள் மேற்பார்வை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் துணைவேந்தர், பதிவாளர் நேரில் ஆஜர்!
சேலம், பிப்.7- சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்காக பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி னர். சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்காக துணை வேந்தர், பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த உதவி பேராசிரியரும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செய லாளருமான பிரேம்குமார் மீது கடந்த 2022 ஆம் ஆண்டில் மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாகக்கூறி, பதிவாளர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதேன்பேரில் பிரேம்-குமார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசார ணைக்காக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெக நாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சேலம் மனித உரி மைகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கோவை – மேட்டுப்பாளையம் ரயில் ரத்து
கோவை, பிப்.7- வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராம ரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை - மேட்டுப் பாளையம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவை யில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப் பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06813), நண்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பா ளையம் - கோவை ரயில் (எண்:06815) முழுவதும் ரத்து செய் யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“போதை பொருள் இல்லா கோவை”
கோவை, பிப்.7- போதை பொருள் பக்கமே செல்லாமல் இருக்க மாணவர் கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை மாநகர காவல்துறை மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து டிஜிட்டல் வடிவிலான போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஜிட்டல் வடிவில் நடத்தப்பட்டது. “போதை பொருள் இல்லா கோவை” என்கிற தலைப்பில், நடைபெற்ற இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி யில், அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொண்டு, உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை விழிப்புணர்வு பிரச்சா ரத்தில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் பாராட்டி பேசுகையில், நமக்குள் அனைத் தும் சமநிலையில் இருக்க வேண்டும். நிலைத்தன்மையும் இருக்க வேண்டும். சில திரைப்படங்கள், பல தவறான வழிகாட்டுதல்களையும் போதிக்கின்றன. நல்ல கருத்துக் களை மனதில் அவை விதைக்க வேண்டும். கோவை மாந கரில் பல்வேறு விதங்களில் போதை பொருட்கள் வெளி யாகி கொண்டே இருக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து தடுத்து வருகிறோம். போதை பொருட்களை ஒழிக்க பல் வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒழிப் பதை விட, அது வரும் முன்பே தடுப்பதே மிக அவசி யம். போதை பொருள் பக்கமே செல்லாமல் இருக்க மாணவர் கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். கோவையில் போதை பொருட்கள் நுழையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று பேசினார்.
மூலிகை தாவரங்களை பராமரிக்கும் பணிகள் தீவிரம்
உதகை, பிப்.7- சின்கோனா மூலிகை தாவரங்கள் வளர்ப்பகத்தில், மூலிகை தாவரங்களை வளர்த்து பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதகை. தொட்டபெட்டா அருகே சின் கோனா பகுதியில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் உள்ளது. வனத்துறையின் சார் பில் செயல்பட்டு வரும் இங்கு தைலம், ரோஸ்மேரி, சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, லெமன்கிராஸ் உள்ளிட்ட 13 வகை யான மூலிகை தாவரங்கள் 15 ஏக்கர் நிலத் தில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரு கின்றன. இந்த மூலிகை தாவரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் தைலங் கள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சென்னை வ ண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட சுற் றுலாத் தலங்களில் விற்பனை செய்யப்ப டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மூலிகை தைலங்களான கல்தீரியா தைலம் மூட்டுவலி, கழுத்துக்கட்டி வலி, நெஞ்சு வலி, முடக்கு வாதத்துக்கு நிவாரணியாகும்.
செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
நாமக்கல், பிப்.7- பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள ஜேடர் பாளையம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்து வருவதால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அப் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது. தண்ணீர் முழுமையாக தடை யின்றி செல்வதை திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் மற்றும் நீர்வ ளத்துறையினர் ஞாயிறன்று ஆய்வு செய்த நிலையில், செவ்வாயன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. மேட்டூர் அணையிலி ருந்து சனியன்று மாலை 6 மணி முதல் காவேரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக் கும் விநாடிக்கு 5,600 கன அடி வீதம் தண் ணீர் திறக்கப்பட்டது. நான்கு நாள்களில் மொத்தம் 2 டிஎம்சி தண்ணீர் டெல்டா பாச னத்திற்கு திறக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக தடையின்றி செல்கிறதா? என திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் ஞாயிறன்று ஆய்வு செய்தார். இந்நிலையில், செவ்வாயன்று காலை முதலே சோழசிராமணி, ஜேடர்பாளையம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற் றில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருவதாலும், காவிரி ஆற்றில் தண் ணீர் கழிவுநீர் போல் வருவதாலும் துர்நாற் றம் வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காவிரி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் குறித்து நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தெரு நாய்கள் தொல்லை - மேயரிடம் மனு
கோவை, பிப். 7- மாநகரில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயர் கல்பனாவி டம் பொதுமக்கள் மனு அளித்தனர். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் செவ் வாயன்று நடைபெற்றது. துணை மேயர் ரா.வெற்றிச்செல் வன், துணை ஆணையர் ச.செல்வசுரபி முன்னிலை வகித்த னர். இக்கூட்டத்தில், கோவை மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தினர் அளித்த மனுவில் கூறியிருப்பது: கோவை மாநக ராட்சிக்கு உள்பட்ட தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் தார் சாலை அமைக்க, 3 மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப் பட்டது. உடனடியாக சாலை அமைக்கப்படும் என மாநக ராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற் போது வரை சாலை அமைக்கப்படவில்லை. மேலும், தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் மாடுகள், நாய்கள் அதிகள வில் சுற்றுவதால் வியாபாரிகள், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சித்தாபுதூர் பகுதி மக்கள் சிலர் அளித்த மனுவில் கூறியிருப்பது: சமீப காலமாக, கோவையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் செல்ல அஞ்சுகின்றனர். மேலும், கோவை அரசு மருத்துவமனை, தனி யார் மருத்துவமனைகளில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. எனவே, நாய்களிண் இனப்பெருக்கத்தைக் கட்டுப்ப டுத்த கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மண்டலங்களிலும் 58 மனுக்கள் அளிக்கப் பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாநகராட்சி உதவி ஆணையர்கள் கவி தா, சந்தியா, எழில், பிரேம் ஆனந்த் மற்றும் மாநகராட்சி அலுவ லர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
'