districts

img

செந்நாய்களிடமிருந்து ஆடுகளை பாதுகாத்திடுக விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

சேலம், ஜுலை 18- செந்நாய்களிடமிருந்து ஆடுகள் பலியா வதை தடுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாழப்பாடி வட்ட விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.  சேலம் வாழப்பாடி வட்ட தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் 7ஆவது மாநாடு  சேசன் சாவடி அலமேலு அப்பாதுரை திருமண மண்டபம் கே.வரதராஜன்  நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை சங்கத் தின் மூத்த தலைவர் வீ.பழனிமுத்து ஏற்றி வைத்தார். கே.மனேஷ் வரவேற்பு உரையாற் றினார். மாவட்ட துணை தலைவர் பி.தங்க வேலு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற் றினார். வட்டச் செயலாளர் கே.சுப்ரமணி  வேலை அறிக்கையும், பொருளாளர் சின்னத் தம்பி வரவு-செலவு அறிக்கைகளையும் முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி விவசாய  சங்க மாவட்ட பொருளாளர் ஏ.அன்பழகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் வி.தங்கவேல், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி ஆகியோர் உரையாற்றி னர்.  இதில் மரவள்ளி டன்னுக்கு ரூ.12 ஆயிரம் குறைந்தபட்ச விலை வழங்க வேண்டும்.  செந்நாய்களிடமிருந்து ஆடுகளைப் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் குவிண்டா லுக்கு ரூ.12 ஆயிரம் ஆதார விலையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.  இதில், தலைவராக வி.பழனிமுத்து, செய லாளராக சீனிவாசன், பொருளாளராக ஜெய சூர்யா உள்ளிட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 21 பேர்கள் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி உரை யாற்றினார். முடிவில் ஜம்புலிங்கம் நன்றி கூறினார்.